மகேஷ் பாபு மகளின் அசாத்திய திறமை.. செம கச்சிதமாக குச்சிப்புடி ஆடும் சித்தாரா.. பூரிப்பில் அப்பா!
ஹைதராபாத்: டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தனது மகளின் குச்சிப்புடி நடன வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்து பூரித்துப் போயுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. கடந்த 2005ம் ஆண்டு நம்ரதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மகேஷ் பாபுவுக்கு சித்தாரா மற்றும் கெளதம் என இரு குழந்தைகள் உள்ளனர்.

மகேஷ் பாபு
டோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும் சவுத் இந்தியன் பிரின்ஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. தெலுங்கில் அதிக அளவு ரசிகர் படை வைத்திருக்கும் நடிகர்களில் முன்னணியில் உள்ளார் நடிகர் மகேஷ் பாபு. கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து மகேஷ் பாபு நடித்துள்ள சர்காரு வாரி பாட்டா திரைப்படம் வரும் மே மாதம் 12ம் தேதி வெளியாகிறது.

மகேஷ் பாபு மகள்
நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சித்தாராவுக்கு தற்போது 9 வயதாகிறது. அப்பாவை போலவே செம க்யூட்டாக அழகாக இருக்கிறார் சித்தாரா. தளபதி 66 படத்தில் விஜய்க்கு மகளாக சித்தாரா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அல்லு அர்ஜுனின் மகள் சமந்தாவின் படத்தில் அறிமுகமாகவுள்ள நிலையில், மகேஷ் பாபுவின் மகளும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

குச்சிப்புடி நடனம்
தமிழ்நாட்டிற்கு பரதநாட்டியம், கேரளாவிற்கு கதகளி என பாரம்பரிய நடனங்கள் உள்ள நிலையில், ஆந்திராவிற்கான பாரம்பரிய நடனமான குச்சிப்புடி நடனத்தை கற்று சூப்பராக நடனம் ஆடி உள்ளார் சித்தாரா. மகள் அழகாக நடனமாடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து பூரித்துப் போயுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.

பெருமைப்படுகிறேன் மகளே
தனது ட்விட்டர் பக்கத்தில் மகள் குச்சிப்புடி ஆடும் வீடியோவை ஷேர் செய்த நடிகர் மகேஷ் பாபு, மேலும், சில ட்வீட்களை போட்டு ராம நவமி அதுவுமாக ராம ஸ்லோகம் அடங்கிய நடனத்தை சித்தாரா ஆடுவதை பார்த்து ஒரு தந்தையாக ரொம்பவே பெருமைப் படுகிறேன் என நடிகர் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில்
சர்காரு வாரி பாட்டா படத்தை முடித்த கையோடு நடிகர் மகேஷ் பாபு இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகேஷ் பாபுவுக்காக காடுகளில் நடக்கும் சாகசங்கள் நிறைந்த ஒரு கதையையும் இன்னொரு வரலாற்று கதையையும் இயக்குநர் ராஜமெளலி கூறியுள்ளதாகவும் விரைவில் எந்த கதையை மகேஷ் பாபு முடிவு செய்கிறாரோ, அந்த கதையை படமாக்கப் போகிறாராம் ராஜமெளலி.


Click it and Unblock the Notifications











