Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோயின்களுக்கு போதைப் பொருள் சப்ளை விவகாரம்.. புகார் சொன்ன நடிகைக்கு எதிராக பிரபல இயக்குனர் வழக்கு
மும்பை: பிரபல நடிகைக்கு எதிராக பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட், அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து, போதைப் பொருள் விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வழக்கில் நடிகை ரியா சக்கரவர்த்தி உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்னடா மொத்த பேரும் வந்துட்டீங்க.. இந்த வாரம் நாமினேஷன்ல இருக்குறவங்க இவங்கதான்.. வச்சு செய்யுங்க!
மேலும் விசாரணை
இந்தி திரையுலகைச் சேர்ந்த பலருக்கு போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்தது.
வருவது அறிந்து
இந்நிலையில் இந்த வழக்கில் நடிகை லுவீனா லோத், பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது கணவர் சுமித் சபர்வால் பற்றியும் மகேஷ் பட், அவர் சகோதரர் முகேஷ் பட் பற்றியும் பரபரப்பு புகார் கூறி இருந்தார். லுவீனாவின் கணவர் சுமித், மகேஷ் பட்டின் உறவினர்.
பெண்கள் புகைப்படங்கள்
அவர் கூறும்போது, சுமித் சபர்வால் நடிகர்கள், நடிகைகளுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வருவது அறிந்து, விவாகரத்து கோரி இருக்கிறேன். நடிகைகள் அமைரா தஸ்தூர், சப்னா பாபி போன்றோருக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வந்தார். அவர் செல்போனில் பெண்கள் புகைப்படங்கள் அதிகமாக இருக்கிறது.
விரட்டப் பார்க்கிறார்
அவர் பெண்களையும் சப்ளை செய்கிறார். இந்தி சினிமாவில் மகேஷ் பட், டான். அவர் சொல்படி கேட்காவிட்டால், வேலை கிடைக்காமல் செய்துவிடுவார். அவர் மீது நான் புகார் தெரிவித்ததால், என்னை வீட்டை விட்டு விரட்டப் பார்க்கிறார். எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ ஏதும் நடந்தால், அதற்கு மகேஷ் பட் தான் காரணம் என்று கூறியிருந்தார்.
அவதூறு வழக்கு
இது பரபரப்பானது. இயக்குனர் மகேஷ் பட் இதை மறுத்திருந்தார். இந்நிலையில், இயக்குனர் மகேஷ் பட், முகேஷ் பட் ஆகியோர், ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர். நீதிமன்றம், 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு நடிகை லூவினா லோத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?