Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஹீரோயின்களுக்கு போதைப் பொருள் சப்ளை விவகாரம்.. புகார் சொன்ன நடிகைக்கு எதிராக பிரபல இயக்குனர் வழக்கு
மும்பை: பிரபல நடிகைக்கு எதிராக பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட், அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து, போதைப் பொருள் விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வழக்கில் நடிகை ரியா சக்கரவர்த்தி உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
என்னடா மொத்த பேரும் வந்துட்டீங்க.. இந்த வாரம் நாமினேஷன்ல இருக்குறவங்க இவங்கதான்.. வச்சு செய்யுங்க!
மேலும் விசாரணை
இந்தி திரையுலகைச் சேர்ந்த பலருக்கு போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்தது.
வருவது அறிந்து
இந்நிலையில் இந்த வழக்கில் நடிகை லுவீனா லோத், பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது கணவர் சுமித் சபர்வால் பற்றியும் மகேஷ் பட், அவர் சகோதரர் முகேஷ் பட் பற்றியும் பரபரப்பு புகார் கூறி இருந்தார். லுவீனாவின் கணவர் சுமித், மகேஷ் பட்டின் உறவினர்.
பெண்கள் புகைப்படங்கள்
அவர் கூறும்போது, சுமித் சபர்வால் நடிகர்கள், நடிகைகளுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வருவது அறிந்து, விவாகரத்து கோரி இருக்கிறேன். நடிகைகள் அமைரா தஸ்தூர், சப்னா பாபி போன்றோருக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வந்தார். அவர் செல்போனில் பெண்கள் புகைப்படங்கள் அதிகமாக இருக்கிறது.
விரட்டப் பார்க்கிறார்
அவர் பெண்களையும் சப்ளை செய்கிறார். இந்தி சினிமாவில் மகேஷ் பட், டான். அவர் சொல்படி கேட்காவிட்டால், வேலை கிடைக்காமல் செய்துவிடுவார். அவர் மீது நான் புகார் தெரிவித்ததால், என்னை வீட்டை விட்டு விரட்டப் பார்க்கிறார். எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ ஏதும் நடந்தால், அதற்கு மகேஷ் பட் தான் காரணம் என்று கூறியிருந்தார்.
அவதூறு வழக்கு
இது பரபரப்பானது. இயக்குனர் மகேஷ் பட் இதை மறுத்திருந்தார். இந்நிலையில், இயக்குனர் மகேஷ் பட், முகேஷ் பட் ஆகியோர், ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர். நீதிமன்றம், 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு நடிகை லூவினா லோத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!