Don't Miss!
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜி.வி.யை பார்த்து லைட்டா பயமா இருந்தது, இப்போ காத்துக்கிட்டிருக்கேன்: மஹிமா
சென்னை: ஐங்கரன் படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் சேர்ந்து நடிப்பது குறித்து மஹிமா நம்பியார் தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் மஹிமா நம்பியார். சாட்டை படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தார். என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஜி.வி. பிரகாஷ் குமாருடன் சேர்ந்து ஐங்கரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திலும் நடிக்கிறார்.
ஜி.வி.
ரவி அரசு இயக்கி வரும் ஐங்கரன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் நடக்கிறது. மஹிமா முதல் முறையாக ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடித்து வருகிறார்.
பயம்
முதல் நாளே ஜி.வி.யுடன் சேர்ந்து காதல் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. ஜி.வி. பிரகாஷுடன் முதல் முறையாக சேர்ந்து நடிப்பதை நினைத்து லைட்டா பயமாக இருந்தது என்கிறார் மஹிமா.
காதல்
ஜி.வி. பிரகாஷ் வந்து எனக்கு கை கொடுத்தார். வாங்க காதல் காட்சியில் எப்படி நடிப்பது என்று ஒத்திகை பார்க்கலாம் என்றார். அவர் ஏதோ பல காலம் பழகியவரை போன்று பேசினார் என்று மஹிமா கூறியுள்ளார்.
நட்பு
ஜி.வி. பிரகாஷ் என்னிடம் நடந்து கொண்ட விதத்தால் எனக்கு பயம் போய் தைரியம் வந்தது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன் என்கிறார் மஹிமா.