Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கிட்ணாவில் அமலாபால் இடத்தைப் பிடித்த நடிகை மகிமா…
சமுத்திரகனியின் கிட்ணா படத்தில் நடிகை மகிமா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இது அமலாவுக்காக தயாரான கதாபாத்திரமாம்.
நிமிர்ந்துநில் படத்தை இயக்கிய சமுத்திரக்கனி தற்போது கிட்ணா என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இப்படத்தில் முதலில் அமலாபால் கதாநாயகியாக நடிப்பதாக சொல்லப்பட்டது.
நிமிர்ந்து நில் படப்பிடிப்பின்போது ஒருநாள், சமுத்திரக்கனி சொன்ன கிட்ணா கதையைக் கேட்ட அமலாபால், தானே அப்படத்தில் நடிக்க முன்வந்திருக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அமலாபால் பெரிய சம்பளம் கேட்டதால் அவரை நீக்கிவிட்டு, தற்போது மகிமாவை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் சமுத்திரக்கனி
நாயகி மகிமா
சாட்டை படத்தில் அறிமுகமானவர் மகிமா. அதற்கு பிறகு என்னமோ நடக்குது படத்தில் நடித்து சிறப்பான பெயர் பெற்ற மகிமா, தற்போது வெளிவர உள்ள மொசக்குட்டி, புறவி எண், அகத்திணை போன்ற படங்களில் நடிதுக் கொண்டிருகிறார்.
கிட்ணாவில் டபுள் ஆக்ட்
இந்நிலையில், தற்போது சமுத்திரகனி இயக்கும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட கிட்ணா என்ற படத்தில் மகிமா இரட்டை வேடமேற்று நடிக்கிறார்.
டிப்ஸ் கொடுத்த சமுத்திரகனி
சாட்டை படத்தில் நடித்த போது சமுத்திரகனி சார் நடிப்பது பற்றி நிறைய டிப்ஸ் கொடுத்தார் அப்படிப்பட்ட சிறந்த இயக்குனரான சமுத்திரகனி சார் படத்தில் இரட்டை வேடத்தில் கதாநாயகியாக நடிப்பது பெருமையான விஷயம் என்றார் மகிமா.
கீதாரி நாவல் கதை
கிட்ணா? கெடை ஆடு மேய்க்கிறவர்களைப் பற்றிய கதையாம். எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி எழுதின கீதாரி என்ற நாவலுக்கு திரைக்கதை அமைத்து கிட்ணா படத்தை இயக்கி வருகிறாராம் சமுத்திரகனி.
சர்வதேச விருது பெரும்
கீதாரி நாவல் இலக்கிய உலகத்தில் பரவலாக கவனிக்கப்பட்ட கதை. எனவே கீதாரியை மூலக்கதையாகக் கொண்ட கிட்ணா வர்த்தக ரீதியில் மட்டுமல்ல, சர்வதேசஅளவில் பல விருதுகளையும் பெறும் என்கிறார்கள் கிட்ணா படக்குழுவினர்.
அழுத சமுத்திரகனி
நாடோடிகள் படத்தை இயக்கிக்கொண்டிருந்த சமயத்தில் இயக்குனர் சமுத்திரக்கனிக்கு கீதாரி என்கிற நாவல் படிக்க கிடைத்திருக்கிறது. இந்த நாவலை படித்ததும் அவரையறியாமலேயே அழுதுவிட்டாராம்.
நாட்டுக்குள் நடக்கும் அவலம்
அந்த அளவுக்கு மனிதாபிமானம் பற்றி அந்த நாவல் பேசியிருந்ததாம். காட்டுக்குள் இருக்கவேண்டிய மனிதர்கள் நாட்டுக்குள் இருக்கும் அவலத்தை அந்த நாவலில் பொட்டில் அடித்தமாதிரி சொல்லி இருந்தாராம் சு.தமிழ்ச்செல்வி. உடனே அந்த நாவலை படமாக்கவேண்டும் என தோன்றியதால் சு.தமிழ்ச்செல்வியிடம் முறையாக அனுமதி வாங்கி அதைத்தான் இப்போது ‘கிட்ணா' என்கிற பெயரில் படமாக்கி வருகிறார்.