இந்தியர்கள் தங்கள் கலாச்சாரத்துக்கு சம்பந்தமே இல்லாமல் படமெடுப்பது ஏன்? -ரஹ்மானைக் கேட்ட மஜித் மஜிதி

By Shankar

சென்னை: இந்தியர்கள் தங்கள் கலாச்சாரத்துக்கு தொடர்பே இல்லாமல் வெளிநாட்டு கலாச்சாரத்தைப் படமாக்குவது ஏன்? என்று ஏ ஆர் ரஹ்மானிடம் பிரபல ஈரான் இயக்குநர் மஜித் மஜிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை ரஹ்மானே நேற்று தெரிவித்தார்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காவியத் தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.

Majid Majidhi's question to A R Rahman

விழாவில் படக்குழுவினருடன் ஏஆர் ரஹ்மானும் பங்கேற்றார். விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் நீட்டி முழக்கிப் பேசிக் கொண்டே இருந்தனர். குறிப்பாக தயாரிப்பாளர் சசிகாந்தும், நடிகர் சித்தார்த்தும் பொறுமையைச் சோதித்துவிட்டனர்.

எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ரஹ்மான். ஒரு சிறு புன்னகை மட்டுமே அவர் முகத்தில். கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் நடந்தது நிகழ்ச்சி.

இறுதியாக ரஹ்மானைப் பேச அழைத்தனர். அவர் பேசியது முப்பது வினாடிகள்.. நான்கே வரிகள்.

அவரது பேச்சு:

"நான் இதுவரை 3 தலைமுறைகளுக்கு இசையமைத்திருக்கிறேன். சில தினங்களுக்கு முன்பு ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்திடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, அவர் என்னிடம், நான் உங்களுடைய படங்கள் எல்லாம் பார்த்து வருகிறேன். ஏன் உங்கள் கலாச்சாரத்தை விட்டுவிட்டு, வெஸ்டர்ன் கலாச்சாரத்தையே பின்பற்றி வருகிறீர்கள் என்றார். அவருக்கான பதிலாக இந்தப் படம் இருக்கும்."

-ஒரு விழாவில் எப்படி பேச வேண்டும் என்று ரஹ்மானிடம் கற்றுக் கொள்ள வேண்டும் காவியத் தலைவன் குழு!

(குறிப்பு: சாங் ஆப் ஸ்பேராஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களைத் தந்தவர் மஜித் மஜிதி. 'இந்தியாவில் ஏன் நடிகர்களுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்' என்று கேள்வி எழுப்பியவர்).

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X