Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இளைஞர்களிடம் வன்முறை குறைய இசையை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் - இளையராஜா
மதுரை தியாகராஜர் கல்லூரியின் இசை ஆய்வு மையத்தை நேற்று அவர் தொடங்கி வைத்துப் பேசுகையில் இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "தமிழ் இசை மிகவும் பாரம்பரிய கலாச்சாரம் மிகுந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவான இந்த இசை, பல சோதனைகளைத் தாண்டி வந்துள்ளது. நமது பாரம்பரிய இசையைக் காக்க, அதை பள்ளிப் பாடங்களில் ஒரு அங்கமாக அரசு சேர்க்க வேண்டும்.
சமீபத்தில் வெளியான தமிழ் இசை அகராதியைப் பார்த்தபோது பல ஆயிரம் இசை வார்த்தைகளை அதில் படிக்க நேர்ந்தது. அவற்றில் பல எனக்குத் தெரியாதது. ஆனால் நமது இசை எந்த அளவு பெரிய வரலாற்றைக் கொண்டது என்பதைப் புரிய வைத்தது.
நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் பெருகி வருகின்றன. இதைக் குறைக்கிற வல்லமை இசைக்குத்தான் உள்ளது. இசையின் நினைப்பு வந்தாலே மனதிலிருக்கிற வன்முறை உணர்வு தானாகக் குறைந்துவிடும். அதனால் இசையை மாணவப் பருவத்திலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும்," என்றார்.
பின்னர் தான் எழுதி இசைத்துப் பாடிய இதயம் ஒரு கோயில் பாடலை மாணவர் மத்தியில் பாட, அனைவரும் நெஞ்சுருகக் கேட்டனர்.