Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னது...தலைவி பார்ட் டூ எடுக்கப் போறாங்களா ?...கங்கனா நடிப்பாரா ?
சென்னை : டைரக்டர் ஏ.எல்.விஜய், நடிகை கங்கனா ரணாவத்தை வைத்து தலைவி படத்தை இயக்கினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி, நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு செப்டம்பர் 10 ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த படத்தில் கங்கனா நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் ரோலில் கங்கனாவை நடிக்க வைத்தது சரியான தேர்வு என பலர் பாராட்டி வருகின்றனர். இருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை பெறவில்லை.
தலைவி படத்துல நிறைய மிஸ்டேக்ஸ் இருக்கு.. பல விஷயங்களை மாத்திட்டாங்க.. கொதிக்கும் ஜூனியர் எம்ஜிஆர்!
அதோடு, தலைவி படத்தில் வரும் காட்சிகள் சில உண்மைக்கு புறம்பாக இருப்பதாக அரசியல் தலைவர்கள் சிலர் குற்றம்சாட்டி இருந்தனர். சட்டசபையில் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து அவமானப்படுத்தப்பட்டதாக படத்தில் காட்டபபட்டிருப்பதாகவும், ஆனால் உண்மையில் அப்படி எதுவுமே நடிக்கவில்லை. இது அவை குறிப்பில் உள்ளதாகவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆர்வம் காட்டும் மக்கள்
நடிகையாக இருந்த ஜெயலலிதா, எப்படி அரசியல் தலைவர் ஆனார் என்பது தான் தலைவி படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த பல முக்கியமான நிகழ்வுகளை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனராம். அதனால் தலைவி படத்தின் இரண்டாம் பாகம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் நிறைய இருக்கே
ஜெயலலிதாவின் வாழ்க்கையில் காட்டுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளதாக தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். இதனால் தலைவி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம். தலைவி படத்தை பார்த்த பலர் இந்த நிகழ்வை சேர்த்திருக்கலாம், அந்த நிகழ்வை சேர்த்திருக்கலாம் என கருத்து கூறி வருகின்றனராம். அதனால் தான் இரண்டாம் பாகத்தை இயக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
கங்கனா நடிப்பாரா
ஆனால் தலைவி இரண்டாம் பாகத்தில் கங்கனா நடிப்பாரா என்பது தான் சந்தேகம். ஏனென்றால், சமீபத்தில் நடந்த தலைவி ப்ரோமோஷன் விழாவில் பேசிய கங்கனா, பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் தலைவி படத்தில் நடித்துள்ளேன். அடுத்ததாக தெலுங்கு படத்தில் நடிக்க நினைக்கிறேன். பிரபாஸுடன் ஒரு படத்தில் நடிக்க நினைக்கிறேன். பிரபாஸுடன் நடிக்க வாய்ப்பு கொடுக்குமாறு புரி ஜெகந்நாதனிடம் பலமுறை கேட்டு விட்டேன். தொடர்ந்து கேட்டு வருகிறேன் என தெரிவித்தார்.
கங்கனாவின் அடுத்த பயோபிக்
ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவியில் நடித்ததை போல், அடுத்தபடியாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை படத்தை தானே இயக்கி நடிக்க போவதாக கங்கனா கூறி உள்ளார். இதற்கிடையில் வருங்காலத்தில் தான் அரசியலில் நுழைய போவதாகவும் மறைமுகமாக கூறி உள்ளார் கங்கனா. அதனால் தலைவி 2 படத்தில் ஜெயலலிதா ரோலில் யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழு யோசிக்க துவங்கி விட்டது.
அரசியலுக்கு வர திட்டம்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா, நான் ஒன்றும் தேசியவாதியோ, அரசியல்வாதியோ இல்லை. பொறுப்புள்ள சாதாரண குடிமகள். நான் அரசியலில் நுழைய வேண்டும் என்றால் நிறைய மக்கள் ஆதரவு வேண்டும். ஆனால் தற்போது நான் நடிகையாக இருப்பதிலேயே எனக்கு மகிழ்ச்சி. ஒருவேளை நாளை மக்கள் என்னை விரும்பி, எனக்கு ஆதரவு அளித்தால் கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன் என்றார்.
அடுத்தடுத்த படங்கள், அரசியல் கனவு என கங்கனா பல திட்டங்களை வைத்திருப்பதால் தலைவி 2 ல் அவர் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.