Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஜயின் கத்தி பாதிப்பில் உருவாகியதா மகேஷ்பாபுவின் செல்வந்தன்?
சென்னை: கடந்த வாரம் மகேஷ்பாபு நடிப்பில் நேரடியாக தமிழில் வெளியாகிய செல்வந்தன் ( தெலுங்கில் ஸ்ரீமந்துடு) படத்தின் திரைக்கதை விஜயின் நடிப்பில் வெளியாகிய கத்தி படத்தைப் போன்று உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து உள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - சமந்தா நடித்து கடந்த வருடம் தீபாவளியன்று வெளியான திரைப்படம் கத்தி, குளிர்பான கம்பெனி ஒன்றை கட்டுவதற்காக விவசாய நிலத்தை அபகரிக்கும் முயற்சி நடக்கும். அந்த அராஜகத்தை விஜய் போராடித் தடுப்பார், இதுதான் படத்தின் கதை,திரைக்கதை, வசனம் எல்லாமே.
தற்போது மகேஷ்பாபு நடித்து வெளிவந்திருக்கும் செல்வந்தன் திரைப்படம் கத்தி படக்கதை போன்றே உள்ளதாக சினிமா உலகில் ஒரு பேச்சு அடிபடுகிறது. அதாவது கத்தி பாணியில் விவசாய நிலங்கள், தண்ணீர்ப் பிரச்சினை, தன்னலம் கருதாத ஹீரோ இடையில் குளிர்பான பிரச்சினை என்று செல்வந்தன் படம் எடுக்கப் பட்டிருக்கிறது.
இதெல்லாம் வழக்கமாக நடப்பது தானே என்று சொல்கிறீர்களா இந்த இடத்தில் ஒரு பிரச்சினை உள்ளது, அதாவது கத்தி படத்தின் தெலுங்கு உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று வாங்கி வைத்துள்ளது.
தற்போது செல்வந்தன் திரைப்படம் தெலுங்கு மொழியிலும் ஸ்ரீமந்துடு என்ற பெயரில் வெளியாகி இருப்பதால் கத்தி படத்தை ரீமேக்கும் போது தகுந்த வரவேற்பு கிடைக்காத ஒரு நிலை தெலுங்கில் ஏற்பட்டு இருக்கிறது.
இதில் ஒரு சோகம் என்னவென்றால் முதலில் கத்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க மகேஷ்பாபுவை அணுகியபோது ரீமேக் படங்களில் தான் நடிப்பது இல்லை என்று கூறியிருக்கிறார்.
ரீமேக் படத்தில நடிக்க மாட்டீங்க ஆனா அதே மாதிரி கதையில நடிப்பீங்க...நல்ல கொள்கை
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!