நார்த் இந்தியா நடிகை அனுபவித்த நரக வேதனை.. காண்டம் உடன் சென்ற இயக்குநர்.. மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பகீர்!
சென்னை: மலையாள திரைத்துறையை ஹேமா குழுவின் அறிக்கை உலுக்கி எடுத்த நிலையில், டோலிவுட் மற்றும் கோலிவுட்டிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை தொடர்பான பேச்சுக்கள் அதிகரித்துள்ளன. சினிமாவில் சில முன்னணி நடிகர்கள் ஹப் வைத்தே நடத்துவதாகவும் பல இளம் நடிகைகள் முதல் டாப் நடிகைகள் வரை அவர்களின் குழுவில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
பார்ட்டி பண்ணுவது, ஜோடிகளை மாற்றிக் கொள்வது என சினிமா பிரபலங்களுக்கு மத்தியில் நடக்கும் அத்துமீறல்கள் மற்றும் முறையற்ற பாலியல் கலாச்சாரம் தான் திடீர் விவாகரத்துக்கு எல்லாம் காரணம் என்கின்றனர்.

சினிமாவில் நடிகைகள் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களுடன் அட்ஜெஸ்ட் செய்து போவதை நானே என் கண்ணால் பார்த்து இருக்கிறேன் என பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் மசாஜ் தெரப்பிஸ்ட்டுமான இனியன் முருகானந்தம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி பகீரை கிளப்பியுள்ளது.
சினிமாவில் அதிகம் இருக்கு: அட்ஜெஸ்ட்மெண்ட் என்கிற விஷயம் சினிமாவில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இருந்தாலும் இது சினிமாவில் அதிகம் உள்ளதற்கான காரணம். இங்கே தான் கோடிக்கான பணம் புரள்கிறது. ஒரு இளம் பெண் சினிமா ஆசையோடு நடிகர்களுடன் கட்டிப் பிடித்து நடிக்க ரெடியாகும் போது அந்த வாய்ப்பை பெறுவதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தாலும், அதை செய்து விட்டால் ஹீரோயின் ஆகிவிடலாம் அதிகம் சம்பாதிக்கலாம் என நினைக்கும் பெண்கள் தான் இங்கே அதிகம் என இனியன் முருகானந்தம் வெளிப்படையாக கூறியுள்ளார்.
நார்த் இந்தியா நடிகை: எனக்கு நல்லாவே தெரியும். நேரிலேயே பார்த்திருக்கிறேன். ஹைட்டான, வெயிட்டான நார்த் இந்தியா நடிகையை கேரவனில் இயக்குநர் காண்டமை கையில் வைத்துக் கொண்டு அழைத்ததை பார்த்திருக்கிறேன். சினிமாவில் நடிக்க இப்படியெல்லாம் அவஸ்த்தை பட வேண்டியிருக்கு எனக் கூறிவிட்டு அந்த நடிகை படுக்கைக்கு சென்று வந்தார். அதன் பின்னரும் அவர் ரொம்பவே ஹார்ஷாக உடம்பில் காயங்கள் ஏற்படும் அளவுக்கு செய்தார் என்றும் புலம்பியுள்ளார் என மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பகீர் தகவலை கூறியுள்ளார்.
ஆண்களுக்கும் இருக்கு: பெண்களுக்கு மட்டுமின்றி அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையில் இளம் ஆண்களும் சிக்குகின்றனர். எனக்குத் தெரிந்த ஒரு மேக்கப் அசிஸ்டண்ட் இப்போ அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து ஹீரோவாகவே ஆகிவிட்டான். நான் அதற்கெல்லாம் செல்லாத நிலையில், இன்னமும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாகவே உள்ளேன் என இனியன் ஒவ்வொரு மேட்டரையும் ஓபனாக பேசியுள்ளார்.
தயாரிப்பாளர் முதல் மேனேஜர் வரை: நடிகைகளுக்கு பெரிய பட வாய்ப்புகளை பெற்றுத் தரும் மேனேஜரில் ஆரம்பித்து கோடிகளில் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் வரை நடிகைகளை அனுபவித்து தான் வருகின்றனர். ஒரு ஸ்டேஜுக்கு மேல் பாப்புலர் ஆன பிறகு நடிகைகள் தங்களுக்கு பிடித்தவர்களுடன் மட்டுமே செல்வார்கள். சில நடிகைகள் அந்த கருமமே வேண்டாம் என ஒதுங்குபவர்கள் ஏகப்பட்ட இன்னல்களை சந்தித்து போராட்டங்களை அனுபவித்து தான் ஸ்டார் ஆக மாறுகின்றனர். ஆனால், அவர்கள் தான் சினிமாவில் நிலைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











