Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிம்பு, பிரபுதேவாவை நயனதாரா பிரிய 'வசிய' ராஜ்தான் காரணமா...?
சென்னை: உலகம் உருண்டை என்பார்கள். இது நயன்தாரா விஷயத்தில் பொருத்தமாக இருக்கிறது. தற்போது அவரது காதல் பிரிவுகளுக்குக் காரணம் வசியராஜ் என்பவர்தான் காரணம் என்று இப்போது புது டாக் ஒன்று கிளம்பியுள்ளது.
சிம்பு டூ தனுஷ் டூ விஷால் டூ பிரபுதேவா டூ ஆர்யா
சிம்புவில் ஆரம்பித்த காதல் பயணம் தனுஷ், விஷால், பிரபுதேவா, ஆர்யா என்று மாறி இப்போது மீண்டும் சிம்புவிடமே வந்திருக்கிறதாம்.
ஆனால் மேக்கப் மேன் அதே நபர்தான்...!
காதலர்கள் மாறினாலும் நயன்தாராவின் மேக்அப் மேன் மட்டும் மாறவே இல்லையாம். ஐயா படத்தில் தொடங்கி இன்றுவரை ராஜ் என்பவர்தான் நயனின் மேக் அப் மேனாக இருக்கிறாராம். இவருடைய கையிலும், காலிலும் கேரள மாந்திரீகவாதிகள் மந்திரித்து கொடுத்த வசிய தாயத்துகளும், கயிறுகளும் இருப்பதால்தான் இவருக்கு வசியராஜ் என்ற பட்டப்பெயரும் உண்டாம். இவர் என்ன சொன்னாலும் தட்டமாட்டராம் நயன்தாரா.
பெற்றோரையே கட் செய்தார்
ஐயா படப்பிடிப்பு நடக்கும் போது பெற்றோருடன்தான் சூட்டிங்கிற்கு வருவார் நயன்தாரா. ராஜ் வருகைக்குப் பின்னர் பெற்றோரை கட் செய்துவிட்டார் நயன்தாரா. நயன்தாரா தன் சொல்பேச்சை கேட்கவேண்டும் என்பதற்காகவே வசிய தாயத்தை கட்டிக்கொண்டாராம் மேக்அப் மேன் ராஜ்.
உறவுகள் முறிய இவர்தான் காரணமா ?
சிம்பு முதல் ஆர்யா வரை நெருக்கமாக பழக வைத்ததும், பின்னர் உறவு முறிந்து போனதும் இவரது கைங்கரியம்தானாம்.
24 மணி நேரமும் கூடவே!
படப்பிடிப்பு நேரத்தில் மேக் அப் செய்துவிட்டு சூட்டிங் முடிந்த உடன் வீட்டிற்கு சென்றுவிடுவது மேக்அப் மேனின் வேலை. ஆனால் 24 மணிநேரமும் நயன்தாரா உடன் இருக்கிறார் ராஜூ.
பொட்டிப் பாம்பாய்!
நயனின் அனைத்து பெர்சனல் விசயத்திலும் தலையிட்டு முடிவு எடுப்பது ராஜூதான். எதற்கெடுத்தாலும் கோபப்படும் நயன் ராஜூ விசயத்தில் மட்டும் பெட்டிப்பாம்பாய் அடங்கிபோய்விடுவாராம். ராஜூ சொன்னால் மறுபேச்சு கிடையாதாம்.
சிம்புவுடன் மீண்டும் நெருங்கவும் ராஜுதான் காரணமாம்
பிரபுதேவாவை விட்டு பிரிந்த பின்னர் ராஜூ மூலம்தான் நயன்தாராவுக்கு தூதுவிட்டாராம் சிம்பு. மீண்டும் இவர்களின் நட்பு துளிர்க்க காரணமாக இருப்பவர் முன்பு இவர்களை பிரித்த அதே ராஜூதான். ஆனால் இதுவரை இப்படி ஒரு கேரக்டர் நயன்தாரா வாழ்க்கையில் இருக்கிறார் என்பதே அநேகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு சீனுக்கே வராதவர் இந்த வசியராஜ்.