Don't Miss!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
சிம்பு, பிரபுதேவாவை நயனதாரா பிரிய 'வசிய' ராஜ்தான் காரணமா...?
சென்னை: உலகம் உருண்டை என்பார்கள். இது நயன்தாரா விஷயத்தில் பொருத்தமாக இருக்கிறது. தற்போது அவரது காதல் பிரிவுகளுக்குக் காரணம் வசியராஜ் என்பவர்தான் காரணம் என்று இப்போது புது டாக் ஒன்று கிளம்பியுள்ளது.
சிம்பு டூ தனுஷ் டூ விஷால் டூ பிரபுதேவா டூ ஆர்யா
சிம்புவில் ஆரம்பித்த காதல் பயணம் தனுஷ், விஷால், பிரபுதேவா, ஆர்யா என்று மாறி இப்போது மீண்டும் சிம்புவிடமே வந்திருக்கிறதாம்.
ஆனால் மேக்கப் மேன் அதே நபர்தான்...!
காதலர்கள் மாறினாலும் நயன்தாராவின் மேக்அப் மேன் மட்டும் மாறவே இல்லையாம். ஐயா படத்தில் தொடங்கி இன்றுவரை ராஜ் என்பவர்தான் நயனின் மேக் அப் மேனாக இருக்கிறாராம். இவருடைய கையிலும், காலிலும் கேரள மாந்திரீகவாதிகள் மந்திரித்து கொடுத்த வசிய தாயத்துகளும், கயிறுகளும் இருப்பதால்தான் இவருக்கு வசியராஜ் என்ற பட்டப்பெயரும் உண்டாம். இவர் என்ன சொன்னாலும் தட்டமாட்டராம் நயன்தாரா.
பெற்றோரையே கட் செய்தார்
ஐயா படப்பிடிப்பு நடக்கும் போது பெற்றோருடன்தான் சூட்டிங்கிற்கு வருவார் நயன்தாரா. ராஜ் வருகைக்குப் பின்னர் பெற்றோரை கட் செய்துவிட்டார் நயன்தாரா. நயன்தாரா தன் சொல்பேச்சை கேட்கவேண்டும் என்பதற்காகவே வசிய தாயத்தை கட்டிக்கொண்டாராம் மேக்அப் மேன் ராஜ்.
உறவுகள் முறிய இவர்தான் காரணமா ?
சிம்பு முதல் ஆர்யா வரை நெருக்கமாக பழக வைத்ததும், பின்னர் உறவு முறிந்து போனதும் இவரது கைங்கரியம்தானாம்.
24 மணி நேரமும் கூடவே!
படப்பிடிப்பு நேரத்தில் மேக் அப் செய்துவிட்டு சூட்டிங் முடிந்த உடன் வீட்டிற்கு சென்றுவிடுவது மேக்அப் மேனின் வேலை. ஆனால் 24 மணிநேரமும் நயன்தாரா உடன் இருக்கிறார் ராஜூ.
பொட்டிப் பாம்பாய்!
நயனின் அனைத்து பெர்சனல் விசயத்திலும் தலையிட்டு முடிவு எடுப்பது ராஜூதான். எதற்கெடுத்தாலும் கோபப்படும் நயன் ராஜூ விசயத்தில் மட்டும் பெட்டிப்பாம்பாய் அடங்கிபோய்விடுவாராம். ராஜூ சொன்னால் மறுபேச்சு கிடையாதாம்.
சிம்புவுடன் மீண்டும் நெருங்கவும் ராஜுதான் காரணமாம்
பிரபுதேவாவை விட்டு பிரிந்த பின்னர் ராஜூ மூலம்தான் நயன்தாராவுக்கு தூதுவிட்டாராம் சிம்பு. மீண்டும் இவர்களின் நட்பு துளிர்க்க காரணமாக இருப்பவர் முன்பு இவர்களை பிரித்த அதே ராஜூதான். ஆனால் இதுவரை இப்படி ஒரு கேரக்டர் நயன்தாரா வாழ்க்கையில் இருக்கிறார் என்பதே அநேகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு சீனுக்கே வராதவர் இந்த வசியராஜ்.