Don't Miss!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- News
காற்றழுத்த தாழ்வு மண்டலம்..தமிழ்நாட்டில் 29 முதல் இடி மின்னலுடன் மழை..சூறாவளியும் வீசுமாம்
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
முடிவுக்கு வந்த மலைக்கா -அர்ஜூன் கபூர் உறவு... சோகத்தில் மலைக்கா?
மும்பை : கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்த மலைக்கா அரோரா -அர்ஜூன் கபூர் உறவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையில் 13 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்தது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் இவர்கள் இருவருக்குள் பிரிவு ஏற்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாகவே கூறப்பட்டு வந்தது.
விஜய்சேதுபதியின் ஸ்டேஷன்ல ஷிவானி தான் லேடி போலீஸா? இயக்குநர் பொன்ராம் உடன் ஒரு கூல் போட்டோ!

நடிகை மலைக்கா அரோரா
உயிரே படத்தில் இடம்பெற்ற ரயில் பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலில் ரயிலின் மேலே நின்று மலைக்கா அரோரோ போட்ட ஆட்டமும் மிகவும் பிரபலமானது. ஷாருக்கின் எவர்கிரீன் பாடல்களில் இதுவும் ஒன்று. இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்திருந்தார்.

வெளிப்படையான அறிவிப்பு
நடிகை மலைக்கா அரோரா மற்றும் அர்ஜூன் கபூர் இடையில் ரிலேஷன்ஷிப் காணப்படுவதாக வதந்திகள் பரவின. இதுகுறித்து இவர்கள் இருவரும் மௌனம் சாதித்த நிலையில் கடந்த 2019ல் தங்களது உறவு குறித்து இருவரும் வெளிப்படையாக தெரிவித்தனர்.

முன்னாள் கணவரை பிரிந்த மலைக்கா
இவர்கள் இருவருடைய உறவு காரணமாகவே மலைக்கா தனது முன்னாள் கணவரை பிரிந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அர்ஜூன் கபூருடன் மலைக்கா தன்னுடைய மகனுடன் சேர்ந்து டேட்டிங்கில் இருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரின் 4 வருட உறவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தனிமைப்படுத்திக் கொண்ட மலைக்கா
இதையடுத்து கடந்த 6 நாட்களாக தனது வீட்டை விட்டு வெளியில் வராமல் வெளியுலக தொடர்பிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளார் மலைக்கா. இதேபோல அர்ஜூன் கபூரும் வெளியில் எங்கும் செல்லவில்லை என்றாலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மலைக்காவின் வீட்டிற்கு அருகில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு இரவு உணவிற்காக சென்றுள்ளார்.

சோகமான மனநிலையில் மலைக்கா
ஆனால் அருகில் இருக்கும் மலைக்காவின் வீட்டிற்கு அவர் செல்லவில்லை. ஆயினும் இவர்களது பிரிவு குறித்து இதுவரை இருவரும் வாய் திறக்கவில்லை. மாறாக மலைக்கா தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் மிகவும் சோகமான மனநிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வயது வித்தியாசம்
அர்ஜூனின் வயது 36, மலைக்காவின் வயது 48. இவர்கள் இருவரின் உறவு குறித்தும் வயது வித்தியாசம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தபோது, அதுகுறித்து அர்ஜூன் கபூர், இவ்வாறு விமர்சனங்கள் செய்பவர்கள்தான் தன்னுடைய புகைப்படம் எடுத்துக் கொள்ள அலை மோதுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

விமர்சனங்களை ஏற்படுத்திய பிரிவு
இந்நிலையில் தற்போது இவர்களின் பிரிவு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் வயது வித்தியாசம் தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது. முன்னதாக இவர்களின் பிரிவு குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக மாலத்தீவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இந்த ஜோடி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.