Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தமிழுக்கு வரும் மலையாள 'காக்டெயில்'- அனன்யா ஹீரோயின்!
மலையாளத்தில் வெற்றி பெற்ற காக்டெயில் படம் தமிழில் ரீமேக் ஆகிறது.
சமீப காலமாக, நிறைய மலையாளப் படங்கள் தமிழில் இறக்குமதியாகி வருகின்றன. ட்ராபிக் படம் சென்னையில் ஒரு நாள் என தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.
மலையாள இறக்குமதி
ஏற்கெனவே தயாராகிவரும் ஜன்னல் ஓரம், புலிவால் , உஸ்தாத் ஹோட்டல், மாலினி 22 பாளையங்கோட்டை போன்ற படங்கள் மலையாளப் படங்களின் தழுவல்களே.
காக்டெயில்
இந்த நிலையில் காக்டெயில் படம் தமிழில் தயாராகிறது. இந்தப் படத்தின் தமிழ் உரிமையை வாங்க பலரும் போட்டி போட்ட நிலையில், ஸ்பெல்பௌன்ட் பிலிம்ஸ் ஐஎன்சி என்ற பட நிறுவனம் அந்த உரிமையைப் பெற்று தயாரிப்பில் இறங்கியுள்ளது. இப்படத்துக்கு இன்னமும் பெயரிடப் படவில்லை.
அனன்யா
சீனு - நிகேஷ்ராம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அனன்யா நடிக்கிறார். முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் நடிக்கிறார் .
'அழகிய தமிழ் மகன்' பரதன்
படத்தின் இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் பரதன் . இவர் தில், தூள், கில்லி, மதுர மற்றும் தற்போது அஜீத் நடிக்கு வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தா.
விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கியவரும் இவரே.
சவாலான திரைக்கதை
படம் குறித்து பரதன் கூறுகையில், "திரைக்கதைக்கு சவாலான படம் என்பதால் இந்தப் படத்தை விரும்பி இயக்குகிறேன். சிறப்பான தமிழ் படமாக இது வரும். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைகிறது," என்றார்.