Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தமிழுக்கு வரும் மலையாள 'காக்டெயில்'- அனன்யா ஹீரோயின்!
மலையாளத்தில் வெற்றி பெற்ற காக்டெயில் படம் தமிழில் ரீமேக் ஆகிறது.
சமீப காலமாக, நிறைய மலையாளப் படங்கள் தமிழில் இறக்குமதியாகி வருகின்றன. ட்ராபிக் படம் சென்னையில் ஒரு நாள் என தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.
மலையாள இறக்குமதி
ஏற்கெனவே தயாராகிவரும் ஜன்னல் ஓரம், புலிவால் , உஸ்தாத் ஹோட்டல், மாலினி 22 பாளையங்கோட்டை போன்ற படங்கள் மலையாளப் படங்களின் தழுவல்களே.
காக்டெயில்
இந்த நிலையில் காக்டெயில் படம் தமிழில் தயாராகிறது. இந்தப் படத்தின் தமிழ் உரிமையை வாங்க பலரும் போட்டி போட்ட நிலையில், ஸ்பெல்பௌன்ட் பிலிம்ஸ் ஐஎன்சி என்ற பட நிறுவனம் அந்த உரிமையைப் பெற்று தயாரிப்பில் இறங்கியுள்ளது. இப்படத்துக்கு இன்னமும் பெயரிடப் படவில்லை.
அனன்யா
சீனு - நிகேஷ்ராம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அனன்யா நடிக்கிறார். முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் நடிக்கிறார் .
'அழகிய தமிழ் மகன்' பரதன்
படத்தின் இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் பரதன் . இவர் தில், தூள், கில்லி, மதுர மற்றும் தற்போது அஜீத் நடிக்கு வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தா.
விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கியவரும் இவரே.
சவாலான திரைக்கதை
படம் குறித்து பரதன் கூறுகையில், "திரைக்கதைக்கு சவாலான படம் என்பதால் இந்தப் படத்தை விரும்பி இயக்குகிறேன். சிறப்பான தமிழ் படமாக இது வரும். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைகிறது," என்றார்.