Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தனி ஒருவன் பட நடிகர் திடீர் மரணம்.. மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: தனி ஒருவன், கொடி உட்பட பல தமிழ் படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகரான அனில் முரளி காலமானார். அவருக்கு வயது 56.
Recommended Video
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் அனில் முரளி. மலையாள தொலைக்காட்சித்துறையில் பணியாற்றிய அனில் முரளி.
பின்னர் 1993ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் ஒரு கவிதா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
என் வாழ்க்கையில் சிறந்த நேரம்.. இதுதான் கல்யாண தேதி.. கன்பர்ம் பண்ணினார் பிரபல நடிகர் ராணா!
200க்கும் மேற்பட்ட படங்கள்
ஏராளமான மலையாள படங்களில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார் அனில் முரளி. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திடீர் மரணம்
தமிழில் நிமிர்ந்து நில், தனி ஒருவன், கனிதன், அப்பா, கொடி, தொண்டன், மிஸ்டர் லோக்கல், நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வால்டர் படம் ரிலீஸானது. இந்நிலையில் நடிகர் அனில் முரளி திடீரென காலமானார்.
உயிர் பிரிந்தது
கல்லீரல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அனில் முரளி கொச்சியில் உள்ள அஸ்டர் மெடிசிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
|
திரையுலகம் இரங்கல்
அவரது மறைவு மலையாளம் மட்டுமின்றி ஒட்டு மொத்த திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மரண செய்தியை கேட்டு ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நடிகர் பிரித்விராஜ் உட்பட திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.