Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மலையாள நடிகர் மீது பெண் பாலியல் புகார்.... கஷ்டப்பட்டு தப்பியதாகக் குற்றச்சாட்டு!
மலையாள நடிகர் முகேஷ் மீது பெண் இயக்குனர் ஒருவர் பாலியல் குற்றம்சாட்டியுள்ளார்
மும்பை: மும்பையைச் சேர்ந்த பெண் இயக்குனர் ஒருவர் மலையாள நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக பிரபலங்களினால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்களின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே போகிறது.
நடிகைகள், பாடகிகள் என பலரும் தைரியமாக முன்வந்து தங்களின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்துவரும் நிலையில், மலையாள நடிகர் முகேஷ் மீதும் புகாரெழுந்துள்ளது.
முகேஷ்
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருந்தவர் முகேஷ். நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் கோலோச்சியவர். அரசியலில் களமிறங்கிய முகேஷ் தற்போது கொல்லம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
மீ டூ ஹேஷ்டேக்
மும்பையைச் சேர்ந்த கேஸ்டிங் இயக்குனர் தெஸ் ஜோசப், தான் ஒரு மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கியபோது நடிகர் முகேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக #meetoo ஹேஷ்டேக்கில் பகிர்ந்துள்ளார்.
|
ஹோட்டல் அறை
19 வருடங்களுக்கு முன்பு நடிகர் முகேஷ் மலையாளத் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தெஸ் ஜோசப் இயக்கியுள்ளார். அப்போது முகேஷ் தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு அவரை அழைத்ததாகவும், ஒரு கட்டத்தில் தெஸ் ஜோசப் தங்கியிருந்த ஹோட்டல் அறையை மாற்றி முகேஷின் அறைக்கு பக்கத்திலேயே தங்க கட்டாயப்படுத்தினார் என்றும் பதிவிட்டுள்ளார்.
உதவி
அப்போது சுதாரித்துக்கொண்ட தெஸ் ஜோசப் தன்னுடைய மேலதிகாரியாக இருந்த டெரிக் ஓ ப்ரியனைத் தொடர்புகொண்டு விவரத்தைச் சொன்னதும் உடனடியாக பிளைட் புக் செய்து மும்பைக்கு திரும்பிச் செல்ல உதவினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், துரிதமாக செயல்பட்ட டெரிக்குக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
பங்கு
மேலும் இதுபோல் பெண்களை வேட்டையாடுபவர்களுக்கு ஆதரவாக செயல்படும் ஹோட்டல் ஊழியர்களுக்கும் இதில் பங்குள்ளது எனக் குறிப்பிட்டுள்ள தெஸ் ஜோசப், சென்னையின் பிரபலமான நட்சத்திர விடுதியொன்றையும் கடுமையாக சாடியுள்ளார்.
முகேஷ்
இதுதொடர்பாக நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷிடம் கேட்கபட்டதற்கு, இருபது வருடங்களுக்கு முன்னால் என்ன நடந்ததென்று ஞாபகம் இல்லை. உங்கள் இஷ்டத்திற்கு எதுவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள் என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.