Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மன அழுத்தத்தால் தற்கொலை..சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்..அதிர்ச்சியில் திரையுலகம்!
கேரளா : அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்து பிரபலமான மலையாள நடிகர் சரத் சந்திரன் வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
37 வயதே ஆன நடிகர் சரத் சந்திரன் மலப்புரம் கக்காட்டில் உள்ள அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது சலடத்தை கைப்பற்றி போலீசார் மேற்கொண்ட சோதனையில், தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்ற கடிதத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
திருமண மேடையில் இருக்கும்போதே விஜய் செய்த நெகிழ்ச்சியான காரியம் தெரியுமா...
நடிகர் சரத் சந்திரன்
மலையாள நடிகர் சரத் சந்திரன் 2016 ஆம் ஆண்டு வெளியான அனீஸ்யா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய 'அங்கமாலி டைரீஸ்' படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் 'ஒரு மெக்சிகன் அபாரத', சிஐஏ, கூடே, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல விளம்பரங்களில் நடித்துள்ள சரத் சந்திரன், பல முன்னணி நடிகர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.
தற்கொலைக்கு யாரும் காரணமில்லை
இந்நிலையில், நடிகர் சரத் சந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததை அடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் இறந்து கிடந்தார். இதையடுத்து, வீட்டில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், அவரது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்ற கடிதத்தை போலீசார் வீட்டிலிருந்து கண்டுபிடித்தனர்.
விஷம் குடித்து தற்கொலை
கொச்சி பூர்வீகமாக கொண்ட சரத் சந்திரன் சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு ஒரு சகோதரும் உள்ளார். நடிகர் சரத் சந்திரன் மன உளைச்சலால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஆழ்ந்த இரங்கல்
சரத் சந்திரனின் அகால மரணத்தால் மலையாள திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. பலரும் அவருக்கு இணையத்தின் வழியாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தேவையில்லாத மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற காரணங்கால் அண்மைக்காலமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்று தற்கொலை எண்ணம் வருகிறது என்றால், அவர்கள் உரிய கவுன்சிலிங் எடுத்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!