Don't Miss!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆரியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆட்டோ ஷங்கர் பட ஹீரோ!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரிக்கு அடுத்து ரிலீஸுக்காக பல திரைப்படங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறது.
மேலும் பல புது திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் ஆரி அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் திரில்லர் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இசையமைப்பாளர் மற்றும் நடிகரான சித்தார்த் விபின் திடீர் திருமணம்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
இதன் பட பூஜை சமீபத்தில் ஏ ஆர் முருகதாஸ் முன்னிலையில் நடைபெற்ற நிலையில் அதில் இப்பொழுது வில்லனாக ஆட்டோ ஷங்கர் பட புகழ் நடிகர் ஷரத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
16 கோடி ஓட்டுக்களை
திறமையான நடிகராக இருந்தும் தமிழ் சினிமாவில் இன்று வரை தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தவித்து வந்த ஆரிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து அதில் வெற்றியாளராக மகுடம் சூடினார். தமிழில் இதுவரை நடந்த 3 சீசன்களில் இல்லாத அளவிற்கு தனி ஒரு ஆளாக 16 கோடி ஓட்டுக்களை வாங்கிக் குவித்து உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் பெருகிப் போக ஏற்கனவே நடித்திருந்த பல படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இப்பொழுது வெளியாக தயாராகிக் கொண்டிருக்கிறது.
அதிகாரியாக
அந்த வகையில் பகவான் மற்றும் அலேகா போன்ற திரைப்படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வர, பிக்பாஸ் நிகழ்ச்சி பின் ஆரிக்கான ரசிகர்கள் கூட்டம் பல மடங்கு பெருகி இருப்பதைப் போலவே அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் அறிமுக இயக்குனர் அபின் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் கையில் போலீஸ் அதிகாரியாக முதல்முறையாக நடிக்கும் ஆரி அந்த படத்தின் படப்பூஜை சமீபத்தில் நடைபெற அதில் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சுந்தர்ராஜன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
நடிகை வித்யா பிரதீப்
ஷவுரியா புரொடக்ஷன்ஸ் மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல சீரியல் நடிகை வித்யா பிரதீப் ஒப்பந்தமாகி இருக்க படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்கப்பட உள்ளது.
Recommended Video
சூப்பரான திரில்லர் திரைப்படம்
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் ஷரத் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. செக்கச்சிவந்த வானம், சண்டைக்கோழி 2, அங்கமலே டைரீஸ் மற்றும் ஆட்டோ சங்கர் சீரிஸ்களில் நடித்து பிரபலமான ஷரத் இதில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்க விரைவில் ஒரு சூப்பரான திரில்லர் திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளது.
-
என்ன இவ்ளோ செக்சியா இருக்கு.. என்னால் பாட முடியாது.. பாக்யராஜுக்கு கண்டிஷன் போட்ட இளையராஜா
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!