Don't Miss!
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சே, இப்படியா நடந்துக்கொள்வார்?..போலீஸாக நடித்து பிரபலமான மலையாள நடிகர்..போக்சோவில் தூக்கியது போலீஸ்!
திருவனந்தபுரம் : நடிகர் ஸ்ரீஜித் ரவி, தமிழ் மற்றும் மலையாள படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்து வருபவர்.
இவர் கடந்த 2016ல் 14 பள்ளி மாணவிகளின் முன்பு அநாகரிகமாக நடந்துக் கொண்டதாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது இரண்டு மைனர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணாமலை பாம்பு காட்சியில் ரஜினி சாரின் ஐடியா வெர்க் அவுட் ஆனது... இயக்குநரின் மலரும் நினைவுகள்
மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி
நடிகர் ஸ்ரீஜித் கடந்த 2005ல் வெளியான மயூகம் என்ற மலையாளப் படம் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர். இதையடுத்து அதே ஆண்டில் வெளியான சாந்துப்பொட்டு என்ற மிகப்பெரிய ஹிட் படத்திலும் இவர் நடித்துள்ளார். மிஷன் 90 டேஸ், புன்யாலன் அகர்பத்தீஸ் அண்ட் புன்யாலன் பிரைவேட் லிமிடெட் போன்ற ஹிட் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
தமிழிலும் படங்கள்
தொடர்ந்து பல கேரக்டர்களில் நடித்துவந்த இவர் தமிழிலும் வேட்டை, கும்கி, மதயானைக்கூட்டம், கதகளி மற்றும் அசுரவதம் போன்ற படங்களில் நடித்துள்ளார். கொடூரமான வில்லன் கேரக்டர்களில் இவர் சிறப்பான நடித்து பெயர் பெற்று வந்தார். தமிழில் இவர் ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் சிறப்பான பெயரை பெற்றுள்ளார்.
மைனர் பெண்களிடம் அத்துமீறல்
இவர் தற்போது இரண்டு மைனர் பெண்களிடம் பாலியல் அத்துமீறியதாக கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4ம் தேதி திரிச்சூரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஸ்ரீஜித் காரில் இருந்தநிலையில், அந்த வழியாக வந்த இரண்டு மைனர் பெண்களிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போக்சோ சட்டத்தில் கைது
இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது அவருக்கு புதிதானதல்ல. கடந்த 2016ல் இதேபோல ஒரு படத்தின் சூட்டிங்கின்போது, அந்த வழியாக வந்த 14 பள்ளி மாணவிகள் முன்பு அவர் இதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
2016லும் இதே காரணத்திற்காக கைது
அந்தப் பள்ளி மாணவிகளின் தலைமை ஆசிரியர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து ஸ்ரீஜித் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீனிலும் வெளிவந்தார். இதையடுத்து இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதாகவும் போலீசார் இந்த வழக்கில் போதுமான ஆதாரத்தை சமர்ப்பிக்க தவறிவிட்டதாகவும் அந்த மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.