Don't Miss!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
“எனக்கு மட்டுமல்ல.. என் அம்மாவுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார்”.. திமிரு வில்லன் மீது மீடூ புகார்
மலையாள வில்லன் நடிகர் விநாயகன் மீது மீடூ புகார் கூறப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகரான விநாயகன் மீது சமூக ஆர்வலர் மிருதுளா தேவி என்பவர் மீடூ புகார் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரபலமானவர் நடிகர் விநாயகன். வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர். தமிழில் இவர் விஷாலின் திமிரு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் இவர் பாஜகவுக்கு எதிரான கருத்தைக் கூறியதால் சர்ச்சையில் சிக்கினார். அதன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் அவரது நிறம் மற்றும் சாதிய ரீதியாக தாக்குதலுக்கு ஆளானார்.
ஜுவாலா கட்டாவை காதலிக்கிறேனா?: விஷ்ணு விஷால் விளக்கம்
இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்னர், தற்போது அவர் மீது மீடூ புகார் தெரிவித்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மிருதுளா தேவி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அழைத்த போது, போனில் தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாக விநாயகன் மீது அவர் புகார் தெரிவித்துள்ளார். அப்போது, 'என்னை மட்டுமல்லாது என்னுடைய தாயையும் அவர் விரும்பும்படி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என விநாயகன் பேசியதாக மிருதுளா கூறியுள்ளார்.
விநாயகன் மீது மீடூ புகார் கூறுவது ஒருபுறம் இருந்தாலும், அவர் மீதான சாதிய, நிறவெறி தாக்குதல் குறித்து தனது கண்டனங்களையும் மிருதுளா தேவி பதிவு செய்துள்ளார்.