Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்த பிரபல டிவி நடிகை கைது
Recommended Video
கொச்சி: போதைப் பொருள் வைத்திருந்த மலையாள நடிகை அஸ்வதி பாபு மற்றும் அவரின் கார் டிரைவர் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அஸ்வதி பாபு(22). படங்களில் துணை நடிகையாகவும், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். அவர் கொச்சியில் உள்ள த்ரிக்காக்காரா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அஸ்வதியிடம் எக்ஸ்டசி போதைப் பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரெய்டு
போலீசார் நேற்று அஸ்வதியின் வீட்டில் திடீர் என்று சோதனை நடத்தினர். அப்பொழுது பல லட்சம் மதிப்புள்ள எக்ஸ்டசி போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அஸ்வதியும், அவரின் கார் டிரைவர் பினாய் ஆபிரகாமும் வாடிக்கையாளரிடம் போதைப் பொருளை விற்பனை செய்ய காத்திருந்தபோது போலீசாரிடம் சிக்கினார்கள்.
அஸ்வதி
அஸ்வதி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் நள்ளிரவு பார்ட்டிகளில் பயன்படுத்தப்படுவது ஆகும். போலீசார் அஸ்வதி மற்றும் பினாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பினாய் தான் பெங்களூரில் இருந்து அந்த போதைப் பொருளை வாங்கி வந்து அஸ்வதியிடம் கொடுத்துள்ளார்.
கண்காணிப்பு
ரகசிய தகவல் கிடைத்த பிறகு போலீசார் அஸ்வதியை சில வாரங்களாக கண்காணித்துள்ளனர். அதன் பிறகே நேற்று அஸ்வதியும், பினாயும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். இந்த போதைப் பொருள் நெட்வொர்க் பெரியதாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
ரூ. 200 கோடி
கடந்த செப்டம்பர் மாதம் எர்ணாகுளத்தில் மட்டும் ரூ. 200 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அஸ்வதியிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மல்லுவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே