மாதக் கணக்கில் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தார்: 37 வயது நபர் மீது 61 வயது நடிகை புகார்
Recommended Video

திருவனந்தபுரம்: 37 வயது நபர் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக 61 வயது டிவி நடிகை கேரள போலீசில் புகார் அளித்துள்ளார்.
பிரபல மலையாள காமெடி நகைச்சுவை தொடர் மூலம் பிரபலமானவர் அந்த 61 வயது நடிகை. அவர் டிவி சீரியலில் நடிக்கும்போது அந்த குழுவை சேர்ந்த 37 வயது சியா என்பவருக்கும், அவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சியா அந்த நடிகைக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் நடிகை காயம்குளம் காவல் நிலையத்தில் சியா மீது புகார் அளித்துள்ளார்.

நடிகை
சியா கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து என்னை மிரட்டி பல முறை பலாத்காரம் செய்தார். என் வீட்டில் வைத்தும் பலாத்காரம் செய்தார். அதை அவர் வீடியோவும் எடுத்தார். கடந்த 12 நாட்களுக்கு முன்பு அவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார் என்று நடிகை தெரிவித்துள்ளார்.

விபரம்
நடிகைக்கு அந்த நபரின் சொந்த ஊர் எது என்று தெரியவில்லை. தான் மலப்புரத்தை சேர்ந்தவர் என்று முதலில் அந்த நபர் தெரிவித்திருக்கிறார். பின்னர் தனது சொந்த ஊர் எர்ணாகுளம் என்று கூறியுள்ளார். அந்த நபரின் ஊர் உள்ளிட்ட எந்த விபரமும் நடிகைக்கு தெரியவில்லை.

போலீஸ்
நடிகையுடன் இருந்த வீடியோக்களை அந்த நபர் வாட்ஸ்ஆப்பில் தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோ நடிகையின் கணவர், உறவினருக்கும் வந்துள்ளது. நடிகையின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கள்ளத்தொடர்பு
அந்த சியா அனுப்பிய வீடியோக்கள் வாட்ஸ்ஆப்பில் தற்போது பலருக்கும் சென்றுவிட்டது. வீடியோவை பார்த்தவர்கள் நடிகை பொய் சொல்கிறார். அவரை சியா மிரட்டி பலாத்காரம் செய்தது போன்று தெரியவில்லை. இது கள்ளத்தொடர்பு போன்று இருக்கிறது. சிக்கியதும் அந்த நபர் மீது பழிபோடுகிறார் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











