Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மலையாள சினிமாவின் தந்தை அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த தமிழரே: குமரிஅனந்தன் அறிக்கை
சென்னையில் தென்னிந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ள வேளையில், மலையாளச் சினிமாவின் தந்தை ஒரு தமிழர் என அறிக்கை விடுத்துள்ளார் தமிழக முன்னாள் காங்கிரஸ் தமிழர் குமரிஅனந்தன்.
மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 'சென்னையில் நடைபெறும் சினிமா நூற்றாண்டு விழாவில் பல முக்கிய நிகழ்வுகள் நினைவூட்டப்படுகின்றன. மலையாள சினிமாவின் தந்தை என் ஊராகிய அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஜே.சி.டேனியல் என்ற தமிழரேயாவார். 1928-ல் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு நிலையத்தை தொடங்கி அவர் தயாரித்து 1930-ல் வெளியிட்ட விகத குமாரன் என்பதே முதல் மலையாள படம்.
இந்த அங்கீகாரம் பெரும் பாடுபட்டு 6 ஆண்டுகளுக்கு பின் கேரள அரசிடம் பெறப்பட்டது. இப்போது ஆண்டுதோறும் கேரள அரசு மலையாள திரைப்பட வாழ்நாள் விருது ஜே.சி.டேனியல் பெயரால் வழங்கி வருகிறது. நான் இச்சாதனையாளரை சந்தித்து இருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.