Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
நாய்க்காக பைக்கை திருப்பியதால் விபத்து...தலையில் பலத்த காயம்... இளம் சினிமா இயக்குனர் பரிதாப பலி
கொச்சி: பைக் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் சினிமா இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அசோகன், பபிதா பஷீர், ஜேம்ஸ் உட்பட பலர் நடித்து வெளியான மலையாள படம், ஓர்மயில் ஒரு ஷிஷிரம். இந்தப் படத்தை இயக்கி இருந்தவர் விவேக் ஆர்யன்.
இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் பணியாற்றிய விவேக், அவரது புகழ்பெற்ற த்ரிஷ்யம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பின்னர் மெமரிஸ் என்ற படத்திலும் பணியாற்றினார்.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்... தாய்லாந்தில் ஷூட்டிங் நடக்க இதுதான் காரணமாம்
மனைவியுடன்
தமிழில் சில குறும்படங்களை இயக்கியுள்ள விவேக் ஆரியன், அடுத்த படம் இயக்குவதற்கான முயற்சியில் இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி, தனது மனைவி அம்ருதாவுடன் திருச்சூர் அருகிலுள்ள கொடுங்கல்லூரில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
குறுக்கே வந்த நாய்
அப்போது திடீரென்று வண்டியின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. இதற்காக வண்டியை திருப்பினார். அப்போது எதிர்பாராமல் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவரது தலையிலும் அம்ருதாவின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
தொடர் சிகிச்சை
இதையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்ததால், தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார் விவேக்.
பரிதாப மரணம்
இந்நிலையில் நேற்று அவர் பரிதாபமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 30. மறைந்த அவரது உடலுக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடக்க இருக்கிறது.