Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
நாய்க்காக பைக்கை திருப்பியதால் விபத்து...தலையில் பலத்த காயம்... இளம் சினிமா இயக்குனர் பரிதாப பலி
கொச்சி: பைக் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் சினிமா இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அசோகன், பபிதா பஷீர், ஜேம்ஸ் உட்பட பலர் நடித்து வெளியான மலையாள படம், ஓர்மயில் ஒரு ஷிஷிரம். இந்தப் படத்தை இயக்கி இருந்தவர் விவேக் ஆர்யன்.
இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் பணியாற்றிய விவேக், அவரது புகழ்பெற்ற த்ரிஷ்யம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பின்னர் மெமரிஸ் என்ற படத்திலும் பணியாற்றினார்.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்... தாய்லாந்தில் ஷூட்டிங் நடக்க இதுதான் காரணமாம்
மனைவியுடன்
தமிழில் சில குறும்படங்களை இயக்கியுள்ள விவேக் ஆரியன், அடுத்த படம் இயக்குவதற்கான முயற்சியில் இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி, தனது மனைவி அம்ருதாவுடன் திருச்சூர் அருகிலுள்ள கொடுங்கல்லூரில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
குறுக்கே வந்த நாய்
அப்போது திடீரென்று வண்டியின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. இதற்காக வண்டியை திருப்பினார். அப்போது எதிர்பாராமல் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவரது தலையிலும் அம்ருதாவின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
தொடர் சிகிச்சை
இதையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்ததால், தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார் விவேக்.
பரிதாப மரணம்
இந்நிலையில் நேற்று அவர் பரிதாபமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 30. மறைந்த அவரது உடலுக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடக்க இருக்கிறது.