Don't Miss!
- News உயிரை கையில புடிச்சுகிட்டு போகவேண்டி இருக்கே! கிளாம்பாக்கம் வாசலில் நடக்கும் திக்.. உடனே கவனிக்கணும்
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நாய்க்காக பைக்கை திருப்பியதால் விபத்து...தலையில் பலத்த காயம்... இளம் சினிமா இயக்குனர் பரிதாப பலி
கொச்சி: பைக் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் சினிமா இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அசோகன், பபிதா பஷீர், ஜேம்ஸ் உட்பட பலர் நடித்து வெளியான மலையாள படம், ஓர்மயில் ஒரு ஷிஷிரம். இந்தப் படத்தை இயக்கி இருந்தவர் விவேக் ஆர்யன்.
இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் பணியாற்றிய விவேக், அவரது புகழ்பெற்ற த்ரிஷ்யம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பின்னர் மெமரிஸ் என்ற படத்திலும் பணியாற்றினார்.
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்... தாய்லாந்தில் ஷூட்டிங் நடக்க இதுதான் காரணமாம்
மனைவியுடன்
தமிழில் சில குறும்படங்களை இயக்கியுள்ள விவேக் ஆரியன், அடுத்த படம் இயக்குவதற்கான முயற்சியில் இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி, தனது மனைவி அம்ருதாவுடன் திருச்சூர் அருகிலுள்ள கொடுங்கல்லூரில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.
குறுக்கே வந்த நாய்
அப்போது திடீரென்று வண்டியின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. இதற்காக வண்டியை திருப்பினார். அப்போது எதிர்பாராமல் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவரது தலையிலும் அம்ருதாவின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
தொடர் சிகிச்சை
இதையடுத்து எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்ததால், தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார் விவேக்.
பரிதாப மரணம்
இந்நிலையில் நேற்று அவர் பரிதாபமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 30. மறைந்த அவரது உடலுக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடக்க இருக்கிறது.