Just In
- 4 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 5 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 6 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 6 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
இந்தியாவில் 16 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது- மத்திய அரசு
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜிமிக்கி கம்மல் பாடல் ஆசிரியர் அனில் பனச்சூரன் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!
திருவனந்தபுரம்: ஜிமிக்கி கம்மல் பாடல் ஆசிரியரான அனில் பன்ச்சூரன் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 55.
கவிஞர், பாலாசிரியர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் அனில் பனச்சூரன், என்டமேடே ஜிமிக்கி கம்மல் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள காயம்குளம் பகுதியை பூர்விகமாக கொண்ட இவர், அரபிக்கதா, கத பரயும்போல், வெளிப்படினின்டே புஸ்தகம் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்.

ஜிமிக்கி கம்மல்
2007ஆம் ஆண்டு வெளியான அரபிக்கதா படத்தின் மூலம் இயக்குநர் லால் ஜோஸ், அனில் பனச்சூரனை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வெளிபடினின்டே புஸ்தகம் படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடலின் மூலம் உலக அளவில் புகழ் பெற்றார் அனில் பனச்சூரன்.

திடீர் உடல்நலக்குறைவு
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அனில் பனச்சூரன், கொல்லம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து நேற்றிரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அனில் பனச்சூரன்.

குடும்பத்தினர் சந்தேகம்
ஆனால் இரவு 8.30 மணியளவில் அவர் திடீரென உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி போலீஸில் புகார் அளித்தார்.

இயற்கைக்கு மாறான மரணம்
அதன் அடிப்படையில் அனில் பன்ச்சூரனின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.

இரங்கல்
அனில் பனச்சூரனின் திடீர் மரணம் மலையாள திரைத்துறையை உலுக்கியுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.