Don't Miss!
- News நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா? கோர்ட்டுக்கே போயிட்டாங்க.. இன்று ஐகோர்ட் விசாரணை
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஜிமிக்கி கம்மல் பாடல் ஆசிரியர் அனில் பனச்சூரன் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!
திருவனந்தபுரம்: ஜிமிக்கி கம்மல் பாடல் ஆசிரியரான அனில் பன்ச்சூரன் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 55.
கவிஞர், பாலாசிரியர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் அனில் பனச்சூரன், என்டமேடே ஜிமிக்கி கம்மல் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள காயம்குளம் பகுதியை பூர்விகமாக கொண்ட இவர், அரபிக்கதா, கத பரயும்போல், வெளிப்படினின்டே புஸ்தகம் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்.
ஜிமிக்கி கம்மல்
2007ஆம் ஆண்டு வெளியான அரபிக்கதா படத்தின் மூலம் இயக்குநர் லால் ஜோஸ், அனில் பனச்சூரனை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வெளிபடினின்டே புஸ்தகம் படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடலின் மூலம் உலக அளவில் புகழ் பெற்றார் அனில் பனச்சூரன்.
திடீர் உடல்நலக்குறைவு
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அனில் பனச்சூரன், கொல்லம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடர்ந்து நேற்றிரவு 7.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அனில் பனச்சூரன்.
குடும்பத்தினர் சந்தேகம்
ஆனால் இரவு 8.30 மணியளவில் அவர் திடீரென உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி போலீஸில் புகார் அளித்தார்.
இயற்கைக்கு மாறான மரணம்
அதன் அடிப்படையில் அனில் பன்ச்சூரனின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.
இரங்கல்
அனில் பனச்சூரனின் திடீர் மரணம் மலையாள திரைத்துறையை உலுக்கியுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.