தாஸேட்டா கவலை வேண்டாம்.. நாங்க இருக்கோம்! - ஆதரவாக களத்தில் குதித்த ஆண்கள் சங்கம்
பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது என்று கருத்து சொன்னதால் சர்ச்சையில் சிக்கியுள்ள பாடகர் கே.ஜே. யேசுதாஸுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது ஆண்கள் சங்கம்.
திருவனந்தபுரத்தில் நடந்த விழா ஒன்றில் கே.ஜே.யேசுதாஸ் பேசும் போது ஆண்கள் போல் பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது. ஜீன்ஸ் அணிந்து மற்றவர்கள் மனதைக் கெடுக்கக் கூடாது. எதை மறைத்து வைக்க வேண்டுமோ அதை மறைக்க வேண்டும். எளிமையையும் அன்பையும் உயர்ந்த குணங்களை கொண்டவர்கள் பெண்கள். இது போன்ற உடைகள் அணிவது இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என்றார்.

யேசுதாஸ் பேச்சுக்கு பெண்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளா முழுவதும் போராட்டங்களும் நடந்தது. மகளிர் காங்கிரசார் யேசுதாசுக்கு எதிராக ஊர்வலம் நடத்தி போலீசில் புகார் அளித்தனர். மகளிர் காங்கிரசார் அளித்த புகாரின் பேரில் ஜேசுதாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் யேசுதாஸ் பேச்சுக்கு கேரளாவில் உள்ள ஆண்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். யேசுதாஸ் பேச்சு சரியானதுதான் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்த ஒரு பிரிவினரும் யேசுதாஸ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்த மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











