Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொரோனா.. 275 நாளுக்குப் பின் வீட்டைவிட்டு வெளியே வந்த பிரபல ஹீரோ.. கட்டன் சாயாவுடன் போஸ்!
கொச்சி: கொரோனா காரணமாக, பிரபல ஹீரோ 275 நாட்களுக்குப் பிறகு வீட்டை விட்டை வெளியே வந்துள்ளார்.
உலக நாடுகளை பதம் பார்த்து வந்த கொரோனா வைரஸின் தீவிரம் இந்தியாவில் சமீப காலமாக குறைந்து வருகிறது.
இந்த தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருகிறது
சுகாதார அமைச்சகம்
இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 96,44,222 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,40,182 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 91,00,792 பேர் குணமடைந்துள்ளனர். இந்த தொற்றுக்கு 4,03,248 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வீட்டிலேயே இருந்தார்
இந்நிலையில், இந்த கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் லாக்டவுன் பிறப்பிக்கப் பட்டது. இந்தியாவில் கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு முதலில் அதிகமாக இருந்தது. இதனால் வீட்டுக்குள் இருக்கும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர். அதைக் கடைபிடித்த பிரபல ஹீரோ மம்மூட்டி, வீட்டிலேயே இருந்தார்.
275 நாளுக்குப் பிறகு
அதற்குப் பிறகு இப்போதுதான் அவர் முதன்முறையாக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அதாவது 275 நாட்களுக்குப் பிறகு, அவர் வீட்டை விட்டு வந்துள்ளார். அவர் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி, த பிரீஸ்ட் படத்தை முடித்துவிட்டு தனது வீட்டுக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லையாம்.
கட்டன் சாயா
இந்நிலையில், கொச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் வெளியே வந்த அவர், நேராக மெரைன் டிரைவ் சென்றார். பல பகுதிகளில் ரிலாக்ஸாக சுற்றிய அவர், பின்னர் கலூரில் உள்ள ஸ்டேடியத்துக்கு எதிரில் உள்ள கடையில் கட்டன் சாயா குடித்தார். பிறகு ஜாலியாக நண்பர்களுடன் அரட்டை அடித்துள்ளார்.
சோசியல் மீடியா
அவருடன் நடிகர் ரமேஷ் பிஷராடி, தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப், சினிமா தயாரிப்பு நிர்வாகி பாதுஷா ஆகியோரும் அவருடன் வந்தனர். அவர் அங்கு சுற்றிய புகைப்படங்களும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.