twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒளிப்பதிவாளர் அசோக் குமார் இறுதிச் சடங்கை கண்டுகொள்ளாத திரையுலகினர்

    By Siva
    |

    சென்னை: ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் இறுதிச் சடங்குகளில் கோலிவுட்காரர்கள் பலரை காணவில்லை.

    பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமார் உடல் நலக்குறைவால் கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையும், வீடுமாக இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை இனியும் காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த வாரம் அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    Man Behind Magic lens for Johnny, Jeans laid to Rest With None to Mourn from Kollywood

    இந்நிலையில் அவர் கடந்த 22ம் தேதி கூடுவாஞ்சேரியில் உள்ள தனது வீட்டில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. ரஜினிகாந்த் நடித்த ஜானி, ஷங்கரின் ஜீன்ஸ், இந்தியாவின் முதல் 3டி படமான மை டியர் குட்டிச்சாத்தான் உள்ளிட்ட ஏராளமான படங்களில் பணியாற்றியவர். இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கில் திரையுலகினரில் விரல் விட்டும் எண்ணும் நபர்களே கலந்து கொண்டனர்.

    இது குறித்து அசோக்கின் மகன் ஆகாஷ் கூறுகையில்,

    அவரது இறுதிச் சடங்கில் திரையுலகில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. அவர் புகழின் உச்சத்தில் இருக்கையில் இயக்குனர்கள், நடிகர்கள் என்று பலர் அவரை காண வருவார்கள். அவருடன் படம் பற்றி பேசுவார்கள், பார்ட்டி வைக்க விரும்புவார்கள். என்ன மாதிரி உலகில் வாழ்கிறோம் என தெரியவில்லை என்றார்.

    English summary
    Cinematographer Ashok Kumar was laid to rest with none to mourn from Kollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X