Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஃபேஸ்புக்கில் பெண் பெயரில் போலி கணக்கு வைத்து நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியவர் கைது
போபால்: நடிகைக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 30 வயது பெண் போஜ்புரி படங்களில் நடித்து வருகிறார். ரவி ஜோஷி(35) என்பவர் ராதிகா ஜெயின் என்று பெண் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு வைத்துள்ளார்.
அந்த போலி கணக்கு மூலம் நடிகைக்கு ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார். நடிகையோ அவரின் ரெக்வெஸ்ட்டை ஏற்கவில்லை. இதையத்து ஜோஷி அந்த நடிகைக்கு அசிங்கம் அசிங்கமாக மெசேஜ் அனுப்பியுள்ளார்.
ஒரு கட்டத்திற்கு பிறகு பொறுமையை இழந்த நடிகை போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி ஜோஷியை கைது செய்துள்ளனர்.
நடிகை யார் என்ற விபரத்தை வெளியிட மறுத்த போலீசார் இந்தூரை சேர்ந்த அவர் பட விஷயமாக அடிக்கடி மும்பைக்கு சென்று வருவார் என்று மட்டும் தெரிவித்தனர்.