Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிரபல நடிகை முன்பு சுயஇன்பம் அனுபவித்த பி.எம்.டபுள்யூ. டிரைவர்
Recommended Video
மும்பை: பிரபல நடிகை சின்மயிக்கு முன்பு சுயஇன்பம் அனுபவித்த பி.எம்.டபுள்யூ. கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல பாலிவுட் மற்றும் மராத்தி நடிகரும், மாடலுமான சுமீத் ராகவன் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். அவரின் மனைவி சின்மயி சுர்வே மராத்தி படங்கள், டிவி சீரியல்கள், மேடை நாடகங்களில் நடித்து வருகிறார்.
மராத்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர் சின்மயி.
கார்
மும்பை விலே பார்லே பகுதியில் உள்ள பார்லே திலக் வித்யாலயா பள்ளி அருகே ஒரு வெள்ளை நிற பி.எம்.டபுள்யூ. காரில் சபாரி உடை அணிந்திருந்த டிரைவர் வாகனத்தை விட்டு வெளியே வந்து சின்மயி கண் முன்பு சுயஇன்பம் அனுபவித்துள்ளார்.
டிரைவர்
டிரைவர் செய்த காரியத்தால் அதிர்ச்சி அடைந்த சின்மயி அவரை ஓங்கி அறைய முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர் காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டார்.
புகார்
வீட்டிற்கு சென்ற சின்மயி நடந்தது குறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். உடனே ராகவன் விலே பார்லே காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் கொடுத்தார். காரின் எண் 1985 என்பதை மட்டும் சின்மயி கவனித்ததையும் ராகவன் போலீசாரிடம் தெரிவித்தார்.
கைது
ராகவன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டே மணிநேரத்தில் அந்த டிரைவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அந்த நபர் ஜீவன் சவுத்ரி(42) என்று தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ரயில்
முன்னதாக வித்யா பாலன் ரயிலில் சென்றபோது ஒருவர் அவர் கண் முன்பு சுயஇன்பம் அனுபவித்ததாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் சின்மயி கண் முன்பும் அந்த கொடுமை நடந்துள்ளது.