Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சூரத்தில் ஆடிப்பாடிய நமீதாவிற்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய மேனேஜர் “எஸ்கேப்”!
சூரத்: சூரத்தில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற நமீதாவிற்கு உரிய சம்பளத்தினைக் கொடுக்காமல் மேனேஜர் பணத்துடன் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நமீதா சினிமா படங்களில் நடிப்பதோடு கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். வெளிநாடுகளில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளுக்கும் போகிறார். உள்ளூர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.
நகை கடை ஜவுளிக்கடை திறப்புகளிலும் பங்கேற்கிறார். இதற்காக அவருக்கு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக கொடுத்து ஒப்பந்தம் செய்கின்றனர்.
சமீபத்தில் குஜராத் மாநிலம் சூரத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். இதில் நடனமாடுவதற்கு நமீதாவை அழைத்தனர். குறிப்பிட்ட தொகையை சம்பளமாக தருவதாகவும் பேசினார்.
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் ஏற்கனவே பல தடவை நமீதாவை அழைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளனர். சம்பளமும் ஒழுங்காக கொடுத்து இருக்கிறார்கள். எனவே சூரத்தில் நடனமாட சம்மதித்தார். இதில் ஆடுவதற்காக சில பாடல்களில் நடன மாடி சூரத்தில் ரிகர்சலும் எடுத்தார்.
ஆனால், அக்கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடிய பிறகு பேசிய தொகையை நமீதாவுக்கு கொடுக்கவில்லை. பணத்துடன் மேனேஜர் தலைமறைவாகி விட்டார். அவரது போனில் நமீதா தொடர்பு கொண்டார்.
அதுவும் சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நமீதா கூறும்போது, "நடன நிகழ்ச்சிக்கு எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல் மோசடி செய்து விட்டனர். சக நடிகைகளும் இதுபோல் ஏமாறக் கூடாது. பேசிய பணத்தை முன் கூட்டியே வாங்கி விட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.