Don't Miss!
- Automobiles டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- News Silent Period பற்றி தெரியுமா? கண்காணிப்பில் சமூக ஊடகம்! கருத்து கந்தசாமிகளே உஷார்!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஆதிபுருஷ்.. பிரபாஸின் ராமாயணக் கதையில் சூர்ப்பனகையாக இவர்தான் நடிக்கணுமாம்.. ரசிகர்கள் அடம்!
சென்னை: பிரபாஸின் அந்த ராமாயணக் கதையில் சூர்ப்பனகையாக நடிக்க பிரபல நடிகையின் பெயரை பரிந்துரைப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
Recommended Video
தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராஜமவுலி இயக்கிய பாகுபலியில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
அவர் நடித்த சாஹோ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியானது. அடுத்து ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வரும் அவர், இப்போது புதிய படத்தில் நடிக்கிறார்.
கவர்ச்சி உடையில்.. கலக்கல் போஸ்..நேஹா ஷர்மாவின் டூ பீஸ் போட்டோஷூட் !
பர்ஸ்ட்லுக் போஸ்டர்
இந்தப் படத்துக்கு ஆதிபுருஷ் என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்திப் பட இயக்குனர் ஓம்ராவத் இயக்கும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தனர். தீமையை வெற்றிகொள்ளும் நன்மை என்ற கேப்ஷன் கொடுத்திருந்தனர். இந்திய காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கீர்த்தி சுரேஷ்
ராமாயண கதையின் ஒரு பகுதியை வைத்து இந்த படம் தயாராவதாகத் தகவல் வந்துள்ளது. இந்தி, தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர். இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், பிரபல இந்தி நடிகை ஒருவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சவால் நிறைந்தது
3டி படமாக உருவாகும் இந்த படம் பற்றி பிரபாஸ் கூறும்போது, ஒவ்வொரு கேரக்டரும் சவால் நிறைந்தது. இதுபோன்ற ஒரு கேரக்டரை திரையில் கொண்டுவருவது பொறுப்புமிக்கது, பெருமைக்குரியது. இயக்குநர் ஓம் விசேஷமாக வடிவமைத்துள்ள இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
சைஃப் அலிகான்
இந்நிலையில், இந்தப் படத்தில், வில்லனாக இந்தி நடிகர் சைஃப் அலிகான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்கிடையே, ஆதிபுருஷ் போஸ்டரை பாராட்டிய நடிகை தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு, படத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார். அதற்கு கீழே ரசிகர் ஒருவர், சூர்ப்பனகையாக நீங்கள் நடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சூர்ப்பனகை
இன்னொருவர், சூர்ப்பனகையாக நடிப்பதற்காக, இயக்குனருக்கு உங்கள் பெயரை பரிந்துரைக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த விவாதம் ஜாலியாக சென்றுகொண்டிருக்க, களத்தில் புகுந்த நடிகை லட்சுமி மஞ்சு, 'நான் வந்துட்டேன், எதுல கையெழுத்து போடணும் சொல்லுங்க? என்று கிண்டலாகக் கேட்டுள்ளார். தெலுங்கு நடிகையும் நடிகர் மோகன்பாபுவும் மகளுமான லட்சுமி மஞ்சு தமிழில் கடல் உள்பட சில படங்களில் நடித்திருக்கிறார்.