Don't Miss!
- News ரூ.1 கூட செலவில்லாமல் 5 லட்சம் ரூபாய்.. ரேஷன் கார்டு இருக்கா? அப்ப கன்பார்ம்டு.. மத்திய அரசு சூப்பர்
- Finance இந்த ஒரு விஷயத்துக்கு இந்தியா, விளாடிமீர் புடின்-க்கு நன்றி சொல்லிய ஆகனும்..!
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இவர் "ஜிலுஜிலு" மண்டோதரியா.. இல்லை "ஜிலீர்" மண்டோதரியா....?
சென்னை: திகில் படத்திற்கும் கவர்ச்சிப் படங்களுக்கும் எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் ரசிக்கக் காத்திருப்பது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் கூட வழக்கமானதுதான். எனவே இந்த ரசிகர்களை மையமாக வைத்து அவ்வப்போது படங்கள் வருவது வழக்கம்.
அதேசமயம், திரில்லோடு, கவர்ச்சியையும் சேர்த்துக் கொடுக்கும்போது அது ஒரு வித்தியாசமா கலவையாக மாறி கல்லாக் கட்டுவதும் வழக்கம்.
அப்படி ஒரு படம்தான் மண்டோதரி. இது திகில் படம்தானாம். கவர்ச்சிக்கும் இடம் இருக்கிறதாம்.
மைல்ஸ்டோன் மண்டோதரி
ஏ.தக்ஷணாமூர்த்தி வழங்க மைல் ஸ்டோன் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "மண்டோதரி" என்று பெயரிட்டுள்ளனர்.
உதவி இயக்குநரே.. கதை நாயகன்
இந்த படத்தில் கதை நாயகனாக பா.ரஞ்சித்குமார் அறிமுகமாகிறார். இவர் வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
2 நாயகிகள்
கதாநாயகிகளாக தாரீனா, பிரியா என இருவர் நடிக்கிறார்கள். இன்னொரு நாயகனாக அமர் நடிக்கிறார்.
பொன்னம்பலம்.. பாண்டு
இவர்களுடன் பொன்னம்பலம், பாண்டு, விசென்ட்ராய், நாகலட்சுமி, சுபா, திருவாரூர் கருத்திருமன், கமலகண்ணன், எழுமலை, தியாகராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குனர் ஆர்.ஷம்பத் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறாராம்.
யாரது.. ஷம்பத்
இந்தப் படத்தை இயக்குவது ஆர். ஷம்பத். இவர் யாரது என்ற திகில் படத்தை ஏற்கனவே இயக்கிய திரில் அனுபவம் நிரம்பியவர். படத்தின் கதை குறித்து ஷம்பத் சொன்னது....
அஜாக்கிரதையால் ஒரு அசம்பாவிதம்..
மருத்துவ கல்லூரி மாணவர்களின் அஜாக்கிரதையால் கிராமத்துப் பெண் மண்டோதரிக்கு ஏற்படும் அசம்பாவிதம்...அந்த மாணவர்களின் வாழ்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பது தான் கதைக்களம்.
பாலக்காடு.. குமுளி.. கேரளா...
திகில் படமாக மண்டோதரி படம் உருவாகியுள்ளது. கேரளாவின் பாலக்காடு, குமுளி மற்றும் சேலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்திருக்கிறது. விரைவில் திரைக்கு வர உள்ளது மண்டோதரி என்றார் ஆர்.ஷம்பத்.
வரட்டும் பார்க்கலாம்.. மண்டோதரி பயமுறுத்துகிறாளா இல்லையா என்பதை!