கதையே இன்னும் ரெடியாகல.. அப்புறம்தான் ஐஸ்வர்யா நடிக்கிறதை சொல்ல முடியும்! - மணிரத்னம்

By Shankar

லடாக்: என்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதை வேலையே இன்னும் முடியவில்லை. முடிந்த பிறகுதான் யார் நடிக்கிறார்கள் என்பதைச் சொல்ல முடியும் என்றார் இயக்குநர் மணிரத்னம்.

கடல் படத்துக்குப் பிறகு தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம். இதில் மகேஷ்பாபு, நாகார்ஜூனா, ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இடையில் மகேஷ்பாபு விலகிக் கொண்டதாகவும் செய்தி வெளியானது.

Mani Rathnam is still busy in scripting his next

இது பற்றி எந்தக் கருத்தையும் இதுவரை கூறாமல் வழக்கம் போல அமைதிகாத்தார் மணிரத்னம்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்த மணிரத்னத்திடம், அவரது புதிய படம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "என் படத்தின் திரைக்கதை வேலைகளே இன்னும் முடியவில்லை. அது முடிந்த பிறகுதான் ஐஸ்வர்யா போன்றவர்கள் நடிக்கிறார்களா இல்லையா என்பதைச் சொல்ல முடியும். விரைவில் செய்தி வரும்," என்று பதிலளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X