Don't Miss!
- Sports
அஸ்வின் ஆஸி. மண்டைக்குள்ள போய்ட்டாரு.. பங்கமாக கலாய்த்த வசீம் ஜாபர்.. பேட்ஸ்மேன்களுக்கு யோசனை
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் பான் இந்தியா ஸ்டார்ஸ்”: பொன்னியின் செல்வன் சக்ஸஸ் சீக்ரெட் சொன்ன விக்ரம்!
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
பொன்னியின் செல்வன் படத்தை காண ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கண்டிப்பாக வெற்றிபெறும் என விக்ரம் தெரிவித்துள்ளார்.
’இணையத்தில்
வெளியானால்
பெரிய
நஷ்டம்
வரும்’..பொன்னியின்
செல்வன்
குழு
வழக்கு..உயர்
நீதிமன்றம்
உத்தரவு

நாளை வெளியாகும் பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை (செப்.30) உலகம் முழுவதும் வெளியாகிறது. லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட டாப் ஸ்டார்ஸ்கள் இணைந்து நடித்துள்ளனர். கோலிவுட்டின் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் நாளை வெளியாகவுள்ளது ரசிகர்களை ஹைப்பில் வைத்துள்ளது.

ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பு
பொன்னியின் செல்வன் தமிழில் உருவாகி இருந்தாலும், பான் இந்தியா படமாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகிறது. இதனால் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி நகரங்களில் ப்ரோமோஷன் செய்துவிட்டு நேற்று சென்னை திரும்பினர். பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நடைபெற்ற அனைத்து நகரங்களிலும் படக்குழுவினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விக்ரம் சொன்ன சக்சஸ் சீக்ரட்
இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய பொன்னியின் செல்வன் படக்குழுவினர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விக்ரம், இந்தியா முழுவதும் பொன்னியின் செல்வன் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது எனக் கூறினார். மேலும், "பொன்னியின் செல்வன் படத்துக்காக பிற மாநிலங்களுக்கு சென்றபோது வரவேற்பு சிறப்பாக இருந்தது. நாம் நமது சோழர்களின் பெருமையை சொல்லும்போது மற்ற மாநிலத்தவர்களும் சோழர்களை கொண்டாடத் தொடங்கி விட்டனர். இந்த படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது" என்றார்.

பான் இந்தியா பற்றி விக்ரம்
தொடர்ந்து பேசிய விக்ரம், "மணிரத்னம் ஏற்கனவே ரோஜா, பம்பாய் போன்ற படங்கள் மூலம் பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார். அதேபோல், ஏஆர் ரஹ்மானும் பாலிவுட்டில் தொடர்ந்து பயணித்து வருகிறார். பான் இந்தியா ஸ்டார்களான இவர்கள் இருவருமே பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு முதல் படியாக இருப்பார்கள். அதனால், இந்தப் படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியடையும்" எனக் கூறினார். விக்ரமின் இந்த நம்பிக்கை நனவாகுமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிவிந்துவிடும்.