twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியா - பாக் பிரிவினையை வைத்து இந்திப் படம் இயக்கும் மணிரத்னம்!

    By Mayura Akilan
    |

    Mani Ratnam's next Hindi film on India-Pakistan partition
    மும்பை: கடல் படத்துக்குப் பிறகு ஒரு முழுமையான இந்திப் படத்தை இயக்குகிறார் மணிரத்னம்.

    இந்த முறை மீண்டும் தனது பேவரிட் கதைக் களத்தில் குதித்துள்ளார். அது இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை.

    இந்த படத்தின் கதை நாடு பிரிவினை அடைந்த சமயத்தில் நிகழும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம். மணிரத்னம் இயக்க உள்ள இந்திப் படத்திற்கு ரென்சில் டிசில்வா திரைக்கதை எழுதுகிறாராம்.

    இவர் குர்பான் படத்தை இயக்கியுள்ளார். 18 ஆண்டு கால விளம்பரப் பட இயக்குநர் என்ற பெரிய அந்தஸ்து கொண்ட டிசில்வா, ஏற்கனவே அக்ஸ், ரங் தே பசந்தி, ராவணன் ஆகிய படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

    அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடித்த ராவணன் சரியாக போகாவிட்டாலும் மணிரத்னத்துடன் மீண்டும் இணைகிறார் டிசில்வா. இந்தப் படத்தில் இளைய தலைமுறை நடிகர்களை நடிக்க வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English summary
    While his last Hindi release Raavan didn't exactly set the cash registers ringing, Mani Ratnam has already begun work on his next Hindi film . The project will be based on the India-Pakistan partition. A source close to the filmmaker says that the script will be written by Rensil D’Silva, who has earlier penned films like Rang De Basanti and Kurbaan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X