புதுச்சேரியில் பொன்னியின் செல்வன் சூட்டிங்... விரைவில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பங்கேற்பு
பாண்டிச்சேரி : மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன்.
கொரோனா காரணாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் துவங்கியுள்ளது.
விரைவில் ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் சியான் விக்ரம் ஆகியோர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளனர்.

சிறப்பான படங்கள்
இயக்குநர் மணிரத்னம் தனது பல்வேறு சிறப்பான படங்களின் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டு வருபவர். தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். மேலும் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பாளராகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்.

துவங்கிய சூட்டிங்
இந்நிலையில் தற்போது லைக்கா நிறுவனத்துடன் கூட்டு தயாரிப்பாக தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். கொரோனா காரணமாக இந்த படத்தின் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.

கார்த்தி, விக்ரம் பங்கேற்பு
பாண்டிச்சேரியில் இதன் சூட்டிங் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூட்டிங்கில் விரைவில் ஜெயம் ரவி கலந்து கொள்ள உள்ளார். இதனிடையே, சர்தார் மற்றும் சியான் 60 படங்களின் சூட்டிங்கில் உள்ள நடிகர்கள் கார்த்தி மற்றும் விக்ரம் ஆகியோரும் இதன் சூட்டிங்கை முடித்துக் கொண்டு விரைவில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மணிரத்னம் திட்டம்
இந்த ஆண்டிற்குள் இரண்டு கட்டங்களாக இந்த படத்தின் சூட்டிங்கை தொடர்ந்து நடத்தி படத்தின் படப்பிடிப்பை முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு சம்மருக்கு படத்தின் முதல் பாகத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார். மிகவும் பிரம்மாண்டமான வகையில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











