Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் எப்போது? லொகேஷனை அந்த நாட்டுக்கு மாத்திட்டாங்களாமே?
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் லொகேஷனை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video
'பொன்னியின் செல்வன்' நாவலை பிரமாண்ட படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம்.
கல்கியின் புகழ்பெற்ற இந்த நாவலை பலர் படமாக்க முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து மணிரத்னம் இப்போது இயக்கி வருகிறார்.
ஓடிடியில் ரிலீஸானது 'V': முதல் முறையாக மிரட்டல் வில்லனாக நானி.. படம் எப்படி? டிவிட்டர் ரிவ்வியூ!
ஐஸ்வர்யா ராய்
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உள்பட பல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இளங்கோ கிருஷ்ணன் பாடல்கள் எழுதுகிறார்.
குந்தவையாக த்ரிஷா
இதில் ஐஸ்வர்யா ராய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நந்தினியாகவும் மந்தாகினி தேவியாகவும் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா லட்சுமி, பூங்குழலி கேரக்டரில் நடிக்கிறார். ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
பாலாஜி சக்திவேல்
இதற்கிடையே இதில் புதிதாக நடிகர் நிழல்கள் ரவியும் இயக்குனர் பாலாஜி சக்திவேலும் இணைந்துள்ளனர். முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கின்றனர். இவர்கள் வேறு இரண்டு நடிகர்களுக்கு பதிலாக இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுபற்றி படக்குழு ஏதும் தெரிவிக்கவில்லை.
லாக்டவுன் காரணமாக
இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. அடுத்து ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியிலும் புதுச்சேரியிலும் செட் அமைத்து படமாக்கப்பட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு, கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது.
லொகேஷன் மாற்றம்
மத்திய பிரதேச மாநிலத்தில் இதன் ஷூட்டிங் நடத்தப்பட இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது லொகேஷனை மாற்றி இருக்கிறார்களாம். இதன் ஷூட்டிங் இலங்கையில் நடக்க இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதற்கான அனுமதிக்கான வேலைகளில் படக்குழு இறங்கி இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்கிறார்கள்.