Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜெய்பூரில் படமாகும் பொன்னியின் செல்வன்...மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா
சென்னை : ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இரண்டு பாகங்களாக இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், இரண்டின் வேலைகளும் ஒரே சமயத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஜெய்பூரில் பொன்னியின் செல்வன்
தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜெய்பூரில் நடக்க உள்ளது. பொன்னியின் செல்வன் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது. ஏற்கனவே சில சண்டை காட்சிகள் இந்தோனேஷிய காடுகளில் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மாத சூட்டிங்
ஜெய்பூரில் ஒரு மாதம் காலம் படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதால் ஒட்டுமொத்த படக்குழுவும், ஜெய்பூர் செய்ய உள்ளது. ஜெய்பூர் மட்டுமின்றி அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் பொன்னியின் செல்வன் படமாக்கப்பட உள்ளது.
இப்போதைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில்லை
பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களின் சூட்டிங்கும் முடிந்த பிறகே அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது. சூட்டிங் முழுவதும் முடிந்த பிறகு மணிரத்னம், கிராபிக்ஸ் வேலைகளை துவக்க உள்ளார்.
ரூ.500 கோடி பட்ஜெட்
குறுகிய இடைவெளியிலேயே இரண்டு பாகங்களையும் ரிலீஸ் செய்ய மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். லைகா புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
முக்கிய வேடங்களுக்கு சிறப்பு பயிற்சி
பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கு குதிரையேற்றம், வாள் சண்டை உள்ளிட்ட பல பயிற்சிகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.