twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்க.. லாக்டவுனுக்குப் பின் செப்டம்பரில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்!

    By
    |

    சென்னை: லாக்டவுனுக்குப் பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங், செப்டம்பரில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

    கல்கியின் புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வனை' சினிமாவாக்கி வருகிறார் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் படம் உருவாகிறது.

    இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட பல நடிகர், நடிகைகள்
    நடிக்கின்றனர்.

    நடிகை ஷாமிலிக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து !நடிகை ஷாமிலிக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து !

    ஆதித்த கரிகாலன்

    ஆதித்த கரிகாலன்

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் ஐஸ்வர்யா ராய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நந்தினியாகவும் மந்தாகினி தேவியாகவும் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, பூங்குழலி கேரக்டரில் நடிக்கிறார். சுந்தரச் சோழனாக சரத்குமாரும் ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும் நடிக்கின்றனர்.

    தாய்லாந்தில்

    தாய்லாந்தில்

    சின்ன பழுவேட்டைரையராக ரகுமான், ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி குந்தவையாக, த்ரிஷா, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது.
    அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. அங்கு ஜெயம் ரவியின் ஓபனிங் காட்சிகள் படமாக்கப்பட்டன.

    கொரோனா லாக்டவுன்

    கொரோனா லாக்டவுன்

    இதையடுத்து ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. அங்கு ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்தக்கட்ட பட்டப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் லாக்டவுன் முடிந்து செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    Recommended Video

    Unreleased Big Budget Tamil Movies | Dhuruva Natchathiram, Marudhanayagam
    ஐஸ்வர்யா ராய்- விக்ரம்

    ஐஸ்வர்யா ராய்- விக்ரம்

    அனுமதி கிடைத்தால் புனேவில் படப்பிடிப்பை நடத்தவும் இல்லை என்றால், ஐதராபாத்தில் ஷூட்டிங் நடத்துவது என்றும் படக்குழு முடிவு செய்துள்ளது. இதில் ஐஸ்வர்யா ராய் -விக்ரம் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தை அடுத்த வருடம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

    English summary
    The latest reports, about Ponniyin Selvan state that the director and his team is looking forward to resume the shoot of the film, in September.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X