Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புயலால் சென்னையே பீதியில் ஆழ்ந்தபோது உற்சாகமாக வரவேற்ற மணிரத்தினம்!
நிலம் புயலால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பையும், கடல் சீற்றத்தையும், பலத்த சூறாவளிக் காற்றையும் இவர்கள் படம் பிடித்துள்ளனர் தங்களது கடல் படத்துக்காக.
நிலம் புயல் தமிழக கடற்கரைப் பகுதியைத் தாக்கி கரையைக் கடந்த சமயத்தில் மணிரத்தினம், ராஜீவ்மேனன் உள்ளிட்டோர் ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் முகாமிட்டிருந்தனர். புயலின் கோரக் காட்சிகளை தத்ரூபமாக படம் பிடிப்பதே இவர்களது நோக்கம். இருப்பினும் புயல் இவர்கள் இருந்த பக்கம் வராமல் மகாபலிபுரத்தோடு நின்று விட்டது. இருப்பினும் கடல் கொந்தளிப்பையும், சீற்றத்தையும், சூறைக் காற்றையும் இவர்கள் படம் பிடித்துள்ளனர்.
இந்த சமாச்சாரத்தை இப்படத்தில் வில்லனாக நடிக்கும் அரவிந்த் சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். புயல் சீற்றத்துக்கு மத்தியில் சில காட்சிகளைப் படம் பிடித்தோம். அது புதிய அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார் அரவிந்த்சாமி.
புயல் பலருக்கு வாழ்க்கையைக் கெடுக்கிறது, சிலருக்கு வாழ்க்கையை புதுவிதமாக அனுபவிக்க சொல்கிறது...!