Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இயக்குனர் சிகரத்தை புகழ்ந்த சைலன்ட் மணிரத்தினம்
Recommended Video
சென்னை : மணிரத்னம் கமல்ஹாசனின் ராஜ்கமல் அலுவலகத்தில் நடைப்பெற்ற கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் . அதிகம் நிகழ்ச்சிகள் விழாக்கள் எதிலும் கலந்து கொள்ளாத மணிரத்னம் , பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டதன் மூலம் இயக்குனர் சிகரத்திற்கு மரியாதை செலுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியின் போது பேசிய மணிரத்னம் ஆரம்ப காலங்களில் சிவாஜி படங்களை விரும்பி பார்த்தாகவும் , சினிமா எப்படி எடுக்கப்படுகிறது என்பதனை தெரிந்து கொள்ள ஆசைபட்டேன் , சினிமா எடுக்க இயக்குநர் என்று ஒருவர் தேவை , அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் போது தான் இயக்குனர் பாலசந்தர் பற்றி தான் அறிந்ததாகவும் கூறியிருந்தார். மணிரத்னம்.பாலச்சந்தரை தான் நேரில் சந்திக்க வேண்டும் , அவரின் படங்களை தேடி தேடி பாரக்க வேண்டும் என்று தான் மிகவும் ஆசைப்பட்டதாக மணிரத்னம் கூறினார் .
மணிரத்னம் இயக்கிய பல படங்களில் பாலச்சந்தர் படங்களின் தாக்கம் இருப்பதை நம்மில் சிலர் கவனித்து இருப்போம். பாலசந்தர் உறவுகள் பற்றியும் அதனுள் இருக்கும் சிக்கல் , அதை சார்ந்த பல விஷயங்கள் பற்றிய பல படங்களை இயக்கியுள்ளார். அதே போல் மணிரத்னமும் தனது படங்களில் வரும் கதாபாத்திரங்களின் இடையே உள்ள உறவு சார்ந்த பிரச்சனைகளை பேசியிருப்பார் .
அதை தாண்டி பாலசந்தர் குடும்பம் சார்ந்த பிரச்ச்னைகளை பற்றிய படங்களை அதிகம் எடுத்திருக்கிறார் .மணிரத்னம் பாலசந்தர் படங்களில் வருவது போல உறவுகளின் சிக்கல்களை அழுத்தமாக சொல்லமால் மிக மென்மையாக சொல்லிருப்பார்.
ஃபிரீயா பொய் ஜாவா சுந்தரேசனோட பேசிட்டு வாங்க பாஸ் !!!
பாலசந்தர் போல் உயரந்த ஒரு கலைஞரை மணிரத்னம் இதற்கு முன் இப்படி புகழ்ந்தது இல்லை. பல இடங்களில் அவர் பேசியிருந்தாலும் இவ்வளவு விஷயங்களை அவர் இந்த நிகழ்வில் பகிர்ந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
இயக்குனர் சிகரம் பற்றி சொல்ல வேண்டும் என்றல் நிறைய இருக்கும். திரையுலகில் அவருடன் பணிபுரிந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் அவர் ஒரு உந்துதலாகவே இருக்கிறார். அவர் இந்த உலகை விட்டு பிரிந்தாலும் நம் மனதை விட்டு என்றுமே நீங்கமாட்டார்.