Just In
- 7 hrs ago
இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்!
- 7 hrs ago
'அந்த மாதிரி' நடிச்சது தப்பாப்போச்சு.. அதே மாதிரி வாய்ப்புகளே வருகின்றன.. பிரபல நடிகை வேதனை!
- 7 hrs ago
முந்தானை முடிச்சில் எனக்கு சம்பளம் கம்மிதான்.. பாக்யராஜ் பேச்சு
- 7 hrs ago
“படவாய்ப்பு தர படுக்கைக்கு அழைத்தனர்.. வெறுப்பில் நடிப்பதையே நிறுத்தி விட்டேன்”.. பிரபல நடிகை வேதனை
Don't Miss!
- News
நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு
- Automobiles
2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...
- Finance
எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..!
- Technology
ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு
- Sports
நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்!
- Lifestyle
இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி?
- Education
பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இயக்குனர் சிகரத்தை புகழ்ந்த சைலன்ட் மணிரத்தினம்
சென்னை : மணிரத்னம் கமல்ஹாசனின் ராஜ்கமல் அலுவலகத்தில் நடைப்பெற்ற கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் . அதிகம் நிகழ்ச்சிகள் விழாக்கள் எதிலும் கலந்து கொள்ளாத மணிரத்னம் , பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டதன் மூலம் இயக்குனர் சிகரத்திற்கு மரியாதை செலுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியின் போது பேசிய மணிரத்னம் ஆரம்ப காலங்களில் சிவாஜி படங்களை விரும்பி பார்த்தாகவும் , சினிமா எப்படி எடுக்கப்படுகிறது என்பதனை தெரிந்து கொள்ள ஆசைபட்டேன் , சினிமா எடுக்க இயக்குநர் என்று ஒருவர் தேவை , அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் போது தான் இயக்குனர் பாலசந்தர் பற்றி தான் அறிந்ததாகவும் கூறியிருந்தார். மணிரத்னம்.பாலச்சந்தரை தான் நேரில் சந்திக்க வேண்டும் , அவரின் படங்களை தேடி தேடி பாரக்க வேண்டும் என்று தான் மிகவும் ஆசைப்பட்டதாக மணிரத்னம் கூறினார் .

மணிரத்னம் இயக்கிய பல படங்களில் பாலச்சந்தர் படங்களின் தாக்கம் இருப்பதை நம்மில் சிலர் கவனித்து இருப்போம். பாலசந்தர் உறவுகள் பற்றியும் அதனுள் இருக்கும் சிக்கல் , அதை சார்ந்த பல விஷயங்கள் பற்றிய பல படங்களை இயக்கியுள்ளார். அதே போல் மணிரத்னமும் தனது படங்களில் வரும் கதாபாத்திரங்களின் இடையே உள்ள உறவு சார்ந்த பிரச்சனைகளை பேசியிருப்பார் .
அதை தாண்டி பாலசந்தர் குடும்பம் சார்ந்த பிரச்ச்னைகளை பற்றிய படங்களை அதிகம் எடுத்திருக்கிறார் .மணிரத்னம் பாலசந்தர் படங்களில் வருவது போல உறவுகளின் சிக்கல்களை அழுத்தமாக சொல்லமால் மிக மென்மையாக சொல்லிருப்பார்.
ஃபிரீயா பொய் ஜாவா சுந்தரேசனோட பேசிட்டு வாங்க பாஸ் !!!
பாலசந்தர் போல் உயரந்த ஒரு கலைஞரை மணிரத்னம் இதற்கு முன் இப்படி புகழ்ந்தது இல்லை. பல இடங்களில் அவர் பேசியிருந்தாலும் இவ்வளவு விஷயங்களை அவர் இந்த நிகழ்வில் பகிர்ந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
இயக்குனர் சிகரம் பற்றி சொல்ல வேண்டும் என்றல் நிறைய இருக்கும். திரையுலகில் அவருடன் பணிபுரிந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் அவர் ஒரு உந்துதலாகவே இருக்கிறார். அவர் இந்த உலகை விட்டு பிரிந்தாலும் நம் மனதை விட்டு என்றுமே நீங்கமாட்டார்.