Don't Miss!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கவிட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மணிரத்னம் புதிய படத்துக்கு சிக்கல்... தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
சென்னை: கடல் படத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்கும்வரை ஓ காதல் கண்மணியை வெளியிடக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் விநியோகஸ்தர் மன்னன் புகார் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கும் ‘ஓ காதல் கண்மணி' படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படத்துக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் விநியோகஸ்தர் மன்னன் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில், " மணிரத்னம் இதற்கு முன் இயக்கி வெளியிட்ட கடல் படத்தின் விநியோக உரிமையை வாங்கியதன் மூலம் நான் பலகோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளேன். அதற்காக வாங்கிய கடனுக்கு இன்னும் வட்டி கட்டக்கூட முடியாமல் இருக்கிறேன்.
மனிதாபிமான அடிப்படையில் தற்போது பெரிய நிறுவனங்கள் படத்தின் விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்தால் அதற்கு நஷ்டஈடு வழங்கி வருகின்றனர்.
எனவே தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு தற்போது வெளியாகவுள்ள 'ஓ காதல் கண்மணி' பட வெளியீட்டுக்கு முன், மணிரத்னத்திடமிருந்து எனக்கு நஷ்ட ஈட்டுத் தொகையை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுவரை ஓ காதல் கண்மணியை வெளியிடக்கூடாது என்றும் கோருகிறேன்," என்று கூறியுள்ளார்.
துல்ஹர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள ‘ஒ காதல் கண்மணி'யை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்