Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வெறிச்சோடிய திரையரங்குகள்... விரட்டப்பட்ட கடல்!
சென்னை போன்ற சில நகரங்களில் மட்டும் பெயருக்கு சில அரங்குகளில் இந்தப் படம் ஓடிக் கொண்டுள்ளது. ஆனால் மிகக் குறைந்த அளவு பார்வையாளர்களே வந்திருந்தனர்.
சில தியேட்டர்களில் காலைக் காட்சி மற்றும் இரவுக் காட்சிகளை ரத்து செய்யும் அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டதால், மறுநாள் வேறு படங்களை திரையிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
விநியோகஸ்தர்கள் மத்தியில் மணிரத்னம் மீது கட்டுக்கடங்காத கோபம் ஏற்பட்டுள்ளது.
'பணம் தருவேன்.. தரமாட்டேன் என்று ஏதாவது ஒன்றைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவரோ, படத்தை உருவாக்கியது மட்டும்தான் நான்... மற்ற எதுவும் எனக்குத் தெரியாது. அதையெல்லாம் ஜெமினி நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு படத்தை நான் விற்றுவிட்டேன்', என்று கூறியிருப்பதால், அடுத்து அவரோ அவரது மனைவியோ தொடர்புடைய எந்தப் படத்தையும் புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்துள்ளனர்.
அடுத்த சில தினங்களில் மணிரத்னத்துக்கு கடல் தொடர்பாக மேலும் நெருக்கடி உருவாகும சூழல் ஏற்பட்டுள்ளது.