twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெறிச்சோடிய திரையரங்குகள்... விரட்டப்பட்ட கடல்!

    By Shankar
    |

    Kadal Movie
    மோசமான கதை, உணர்வற்ற படமாக்கம், பொருத்தமற்ற நடிகர்கள், செயற்கையான வசன உச்சரிப்பு போன்ற சொதப்பல்களால் படுதோல்வியைத் தழுவிய மணிரத்னத்தின் கடல் படம் கிட்டத்தட்ட வெளியான அனைத்து அரங்குகளிலுமிருந்து ஒரே வாரத்தில் தூக்கப்பட்டுள்ளது.

    சென்னை போன்ற சில நகரங்களில் மட்டும் பெயருக்கு சில அரங்குகளில் இந்தப் படம் ஓடிக் கொண்டுள்ளது. ஆனால் மிகக் குறைந்த அளவு பார்வையாளர்களே வந்திருந்தனர்.

    சில தியேட்டர்களில் காலைக் காட்சி மற்றும் இரவுக் காட்சிகளை ரத்து செய்யும் அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டதால், மறுநாள் வேறு படங்களை திரையிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    விநியோகஸ்தர்கள் மத்தியில் மணிரத்னம் மீது கட்டுக்கடங்காத கோபம் ஏற்பட்டுள்ளது.

    'பணம் தருவேன்.. தரமாட்டேன் என்று ஏதாவது ஒன்றைச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவரோ, படத்தை உருவாக்கியது மட்டும்தான் நான்... மற்ற எதுவும் எனக்குத் தெரியாது. அதையெல்லாம் ஜெமினி நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு படத்தை நான் விற்றுவிட்டேன்', என்று கூறியிருப்பதால், அடுத்து அவரோ அவரது மனைவியோ தொடர்புடைய எந்தப் படத்தையும் புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்துள்ளனர்.

    அடுத்த சில தினங்களில் மணிரத்னத்துக்கு கடல் தொடர்பாக மேலும் நெருக்கடி உருவாகும சூழல் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Manirathnam's Kadal is now running out of Halls due to poor making and worst story.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X