Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மணிரத்தினத்தை நேரில் அழைத்து... கெளரவிக்கும் நியூயார்க் மியூசியம்
சென்னை: இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மணிரத்தினத்திற்கு, நியூயார்க்கில் உள்ள மியூசியம் ஆப் தி மூவிங் இமேஜ் என்ற அருங்காட்சியகம் நேரில் அழைத்துக் கெளரவப்படுத்தவுள்ளது.
59 வயதாகும் மணிரத்தினம் மிக முக்கியமான இயக்குநர் என்று அந்த மியூசியம் புகழாரம் சூட்டியுள்ளது. இந்த கெளரவமானது நீண்ட காலத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டியது. தாமதமாக தற்போது நடைபெறவுள்ளதாக அந்த மியூசியத்தின் இயக்குநர் ரிச்சர் பெனா கூறியுள்ளார்.
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை மணிரத்தினம் இந்த மியூசியத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். இந்த நாட்களில் அவர் இயக்கிய ரோஜா, பாம்பே, தில் சே ஆகிய படங்கள் திரையிடப்படும்.
மிகவும் அரிய வகை இயக்குநர் மணிரத்தினம். மிகச் சிறந்த படங்களை உருவாக்கும் திறமை படைத்தவர். புத்திசாலியான இயக்குநரும் கூட என்றும் அந்த மியூசியம் வர்ணித்துள்ளது.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் திருப்தி அடையச் செய்பவர் மணிரத்தினம் என்றும் ரிச்சர்ட் பெனா கூறியுள்ளார்.